IMG 2313
செய்திகள்இலங்கைபிராந்தியம்

புத்தாக்க போட்டியில் யாழ். பல்கலைக்கழக மாணவர் அணிக்கு முதல் பரிசு

Share

இலங்கை பொறியியல் கல்வி நிறுவகத்தினால், இலங்கையிலுள்ள பல்கலைக்கழகங்களில் கல்வி பயிலும் மாணவர் அணிகளுக்கிடையில் நடாத்தப்பட்ட புத்தாக்க கண்டுபிடிப்பாளர் போட்டியில் யாழ். பல்கலைக்கழக மாணவர் அணி பிரபலமான கண்டுபிடிப்புக்கான முதலாம் பரிசைப் பெற்றுள்ளது .

மாணவர்களிடையேயான புத்தாக்க ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையில், இலங்கையிலுள்ள பல்கலைக்கழகங்களுக்கிடையில் இலங்கை பொறியியல் கல்வி நிறுவகம் The Institution of Engineers Sri Lanka (IESL) நடாத்திய இளமாணி மாணவர் புத்தாக்கப் போட்டியில் (Undergraduate Inventor of the Year – UIY ) யாழ்ப்பாண இலங்கை பொறியியல் கல்வி நிறுவகத்தின் யாழ். பல்கலைக்கழக பிரிவினால் கண்டுபிடிக்கப்பட்ட உணவுக் கழிவுகளில் இருந்து லஞ்ச் சீற்றைப் பிரித்தெடுக்கும் பொறி ( Lunch Sheet Separator from food waste) முதலாம் இடத்தைப் பெற்று பிரபலமான கண்டுபிடிப்புக்கான விருதுக்குரியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் போட்டியின் வெற்றியாளர் தெரிவுக்கான நடுவர்களாக இலங்கை புத்தாக்குநர் ஆணைக்குழுவின் அதிகாரிகள் பங்கு கொண்டிருந்தனர்.

IMG 2312

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
images 3
செய்திகள்இலங்கை

தனிப்பட்ட பாதுகாப்பிற்காகத் துப்பாக்கிகள் கோரி சுமார் 20 எம்.பி.க்கள் விண்ணப்பம் – பாதுகாப்பு அமைச்சின் பரிசீலனையில் கோரிக்கை!

பாராளுமன்ற வட்டாரத் தகவல்களின்படி, தமது தனிப்பட்ட பாதுகாப்பிற்காகத் துப்பாக்கிகளை வழங்குமாறு சுமார் 20 நாடாளுமன்ற உறுப்பினர்கள்...

MediaFile 2
இலங்கைசெய்திகள்

அரசாங்கத்தால் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட முடியவில்லை: போதைப்பொருள் கலாசாரம் மேலோங்கியுள்ளதாக சஜித் பிரேமதாச குற்றச்சாட்டு!

தற்போதைய அரசாங்கத்தினால் சட்டம் ஒழுங்கை உரிய வகையில் நிலைநாட்ட முடியாமல் போயுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித்...

MediaFile 3
இலங்கைசெய்திகள்

அரச வருமானம் 24.8% அதிகரிப்பு: 2025 முதல் அரையாண்டில் மொத்த வருமானம் ரூ. 2,321.7 பில்லியன்!

இந்த ஆண்டின் முதல் அரையாண்டில் அன்பளிப்புகள் நீங்கலாக அரசாங்கத்தின் மொத்த வருமானம் 2,321.7 பில்லியன் ரூவாக...

MediaFile 1
இலங்கைசெய்திகள்

உடுகம்பொல சம்பவத்தில் பொலிஸ் அதிகாரிகளுக்கு இடையூறு: ‘உயரதிகாரியின் சகோதரி’ எனக் கூறியவர் போலியானவர் என பொலிஸ் உறுதி!

உடுகம்பொல வாரச் சந்தைக்கு அருகில் போக்குவரத்துக் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரிகளுக்கு இடையூறு விளைவித்த பெண்...