5 8
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வீடு புகுந்து வன்முறைக்கும்பல் அடாவடி! – வாகனங்களுக்கும் தீ வைப்பு – மோட்டார் சைக்கிள்கள் தீயில் எரிந்து நாசம்!

Share

வீடு ஒன்றினுள் புகுந்த வன்முறைக்கும்பல் ஒன்றால், குறித்த வீட்டின் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தீயை வைத்து விட்டு அங்கிருந்தது தப்பிச்சென்றுள்ளது.

குறித்த சம்பவம் யாழ்ப்பாணம் – கொக்குவில் நந்தாவில் அம்மன் கோவிலுக்கு அருகில் உள்ள வீடொன்றில் இன்று திங்கட்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது.

மூன்று மோட்டார் சைக்கிள்களில் குறித்த வீட்டுக்கு வந்த ஆறுக்கும் மேற்பட்டவர்களை உள்ளடக்கிய கும்பல் ஒன்று அத்துமீறி வீட்டினுள் நுழைந்து வீட்டின் ஜன்னல் கண்ணாடிகளை அடித்து சேதப்படுத்தியுள்ளது.

5 4

அத்துடன், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு மோட்டார் சைக்கிள்களுக்கும் காருக்கும் தீ வைத்துள்ளதுடன், காரையும் அடித்து சேதப்படுத்தியுள்ளது.

குறித்த தீயில், இரண்டு மோட்டார் சைக்கிள்களும் முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ள நிலையில் காரும் தீயால் சேதமடைந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்ட நிலையில், பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

5 5 5 1 5 2 5 3 5 7 5 6

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
21 10
இலங்கைசெய்திகள்

இலங்கையில் உள்ள தாதியர்களுக்கு வெளியான மகிழ்ச்சித் தகவல்

இலங்கையில் மிக விரைவில் தாதியருக்கான பல்கலைக்கழகம் ஒன்று அமைக்கப்படும் என்று சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை...

22 9
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபையின் மேயரை நியமிப்பில் எடுக்கப்பட்ட தீர்மானம்

கொழும்பு மாநகர சபையின் மேயர் மற்றும் பிரதி மேயரை தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பு ஒன்று அடுத்த மாதம்...

20 15
இலங்கைசெய்திகள்

மகிந்தவை திடீரென சந்திக்க சென்ற ரணில்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சந்திக்க முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவரது வீட்டிற்கு சென்றுள்ளார்....

19 14
இலங்கை

உள்ளூராட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற ரணிலை சந்தித்த எதிர்க்கட்சிகள்

உள்ளூராட்சி மன்றங்களின் கூட்டு நிர்வாகத்தை அமைப்பது குறித்து விவாதிக்க, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) மற்றும்...