aq scaled
செய்திகள்விளையாட்டு

சர்வதேச துப்பாக்கி சுடும் போட்டியில் தங்கம் வென்று இந்திய இளம் பெண் சாதனை!

Share

பெருவில் இடம்பெற்று வரும் ஜூனியர் சர்வதேச துப்பாக்கி சுடுதல் போட்டியில், 14 வயதுடைய இளம் இந்தியப் பெண், தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

பெரு நாட்டின் தலைநகரான லிமாவில், ஜூனியர் சர்வதேச துப்பாக்கி சுடும் போட்டி இடம்பெற்று வருகிறது.இந்தப் போட்டித் தொடரில், இந்தியா 8 தங்கப் பதக்கம் உள்ளடங்கலாக 17 பதக்கங்களுடன் முன்னிலையில் இருந்து வருகிறது. அமெரிக்கா இரண்டாம் இடத்தைப் பெற்றுக்கொண்டுள்ளது.

இந்நிலையில், ஜூனியர் சர்வதேச துப்பாக்கி சுடுதல் போட்டியில், நேற்று இடம்பெற்ற பெண்களுக்கான 25 மீற்றர் பிஸ்டல் பிரிவில், 14 வயதுடைய இந்தியாவின் இளம் வீராங்கனை ஒருவர் தங்கப் பதக்கம் பெற்றுக்கொண்டுள்ளார்.

நம்யா கபூர் என்ற இளம் பெண் வீராங்கனையே இவ்வாறு தங்கப் பதக்கத்தை வெற்றிகொண்டு இந்தியாவிற்குப் பெருமை சேர்த்துள்ளார். இதன்மூலம் மிக இளம் வயதில் சர்வதேச துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் தங்கம் வென்றவர் என்ற பெருமையை நம்யா கபூர் பெற்றுள்ளார்.

இதேவேளை,  இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை மனு பாக்கர், குறித்த போட்டியில் வெண்கல பதக்கத்தை வெற்றி கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
images 2 2
செய்திகள்உலகம்

சீனாவின் மிகவும் மேம்பட்ட விமானம் தாங்கிக் கப்பல் ‘ஃபுஜியன்’ சேவையில் இணைப்பு: கடற்படை மேலாதிக்கத்தில் அமெரிக்காவுக்குப் போட்டி!

சீனாவின் மிகவும் திறமையான மற்றும் மேம்பட்ட விமானம் தாங்கிக் கப்பலான ஃபுஜியன் (Fujian) இன்று (நவம்பர்...

24 6714e92d5188d
செய்திகள்அரசியல்இலங்கை

என்னை ஹிட்லர் என்கிறார்கள், பாவம்: குற்றங்களைக் கட்டுப்படுத்துவது குறித்து எழுந்த விமர்சனங்களுக்கு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க பதிலடி!

நாட்டில் இடம்பெற்று வரும் குற்றங்களைக் கட்டுப்படுத்துவற்கு நடவடிக்கை எடுக்கும் போது தன்னைச் சிலர் ‘ஹிட்லர்’ என...

images 1 2
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணத்தில் தீடீர் சோதனைகள்: கூரிய ஆயுதங்கள் மற்றும் ஹெரோயினுடன் 9 பேர் கைது!

யாழ்ப்பாணக் காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் கடந்த இரண்டு தினங்களாக நடத்தப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கைகளின் போது,...

MediaFile 8
இலங்கைசெய்திகள்

போதைப்பொருள் ஒழிப்புக்கு ரூ. 2000 மில்லியன் ஒதுக்கீடு! மஹாபொல மற்றும் ஆசிரியர் மாணவர் கொடுப்பனவு ரூ. 2500 அதிகரிப்பு – ஜனாதிபதி அறிவிப்பு!

போதைப்பொருள் ஒழிப்பு, உயர்கல்வி மற்றும் தொழிற் பயிற்சியை மேம்படுத்துதல் ஆகிய துறைகளுக்காகப் பல முக்கிய நிதி...