Douglas
செய்திகள்அரசியல்இலங்கைபிராந்தியம்

இந்திய மீனவர்களின் படகு இரணைதீவு மக்களுக்கு! – டக்ளஸ் தேவானந்தா

Share

இரணைதீவு மக்களின் போக்குவரத்து தேவைக்காக அண்மையில் இந்திய மீனவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட படகொன்றை கையளிக்க உள்ளோமென கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

மயிலிட்டி கடற்றொழிலாளர் சங்கத்தின் தெரிவு இடம்பெற்ற நிலையில் அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

மயிலிட்டியில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களின் படகுகளின் நிலையை நாம் பார்வையிட்டோம். இரணைதீவு மக்களின் போக்குவரத்து தேவைக்காக அண்மையில் இந்திய மீனவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட படகொன்றை கையளிக்க உள்ளோம்.

இந்தியாவில் இருந்து அழுத்தங்கள் வந்தாலும் இந்திய மீனவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட படகுகள் தற்போது அரசுடமையாக்கப்பட்டுள்ளன.

நாம் நல்லெண்ணத்தை காட்டி இந்திய மீனவர்களை விடுதலை செய்த பொழுதும் இலங்கை மீனவர்கள் இன்றும் இந்திய சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இந்திய அரசு நீதிமன்ற நடவடிக்கையை காரணம் காட்டி செயல்படும் பொழுது நாமும் நீதிமன்ற பொறிமுறை ஊடாகவே செல்ல முடியும் – என்றார்.

#SriLankaNews

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
1c4025e825b9e5cf5fec4832de98f8c41762857214847193 original
செய்திகள்இந்தியா

சபரிமலை ஐயப்ப பக்தர்களுக்கு அவசர புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு!

கேரளாவில் அமீபா மூளை காய்ச்சல் (Amoebic Meningoencephalitis) பாதிப்பால் உயிரிழப்புகள் அதிகரித்து வரும் சூழலில், நாளை...

MediaFile 1 7
இலங்கைசெய்திகள்

வெளிநாட்டுப் பெண்ணிடம் பாலியல் தொந்தரவு: திருக்கோவில் பிரதேசத்தில் தலைமறைவாக இருந்த சந்தேகநபர் கல்முனையில் கைது!

திருக்கோவில் பிரதேசத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த நியூசிலாந்துப் பிரஜை ஒருவருக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்த குற்றச்சாட்டுத்...

125535987 d1afd603 42be 4dc5 92e7 7796b59074e5.jpg
செய்திகள்உலகம்

கட்டாய ராணுவ சேவை அறிமுகம்: அடுத்த 10 ஆண்டுகளில் ராணுவ வீரர்களின் எண்ணிக்கை 2.6 லட்சமாக உயர இலக்கு!

நேட்டோ கூட்டணி நாடுகள் மீது ரஷியா தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளது என ஜெர்மனி ராணுவத் தலைவர்...

MediaFile 12
செய்திகள்இலங்கை

மஸ்கெலியா தோட்டத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் – சவப்பெட்டி ஊர்வலம்!

பெருந்தோட்ட மக்களுக்கான ரூ. 200 சம்பள உயர்வுக்கு எதிராக எதிர்க்கட்சியினர் மாறுபட்ட கருத்துகளைத் தெரிவிப்பதைக் கண்டித்து,...