1640157834 protest 02
செய்திகள்இந்தியா

இலங்கை அரசை கண்டித்து இந்திய மீனவர்கள் போராட்டம்!

Share

இந்திய மீனவர்களை விடுதலை செய்யக்கோரியும், மயிலிட்டி மீன்பிடி துறைமுகத்தில் இலங்கை மீன்பிடி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்த கருத்துக்கு கண்டனம் தெரிவித்தும் ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் இந்திய மீனவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இன்று ராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் தங்கச்சிமடத்தில் இவ்வாறு உண்ணாவிரத போராட்ட்தில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த 3 நாட்களாக எல்லைத் தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட 68 இந்திய மீனவர்களையும், அவர்களின் 10 விசைப் படகுகளையும் இலங்கை கடற்படை கைப்பற்றியுள்ளது.

எதிர்வரும் 31 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ள மீனவர்களை விடுதலை செய்யாத பட்சத்தில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தெரிவித்தனர்.

அத்தோடு இவர்கள் இலங்கை அரசின் செயற்பாட்டையும் கடுமையாக கண்டிப்பதாக தெரிவித்துள்ளனர்.

 

#IndiaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Ranil UNP
செய்திகள்அரசியல்இலங்கை

சிறிகொத்தவில் டிஜிட்டல் புரட்சி: ஸ்டார்லிங்க் வசதி மற்றும் UNP செயலியுடன் களமிறங்கும் ஐக்கிய தேசியக் கட்சி!

ஐக்கிய தேசியக் கட்சி (UNP) தனது அரசியல் கட்டமைப்பை நவீன தொழில்நுட்பத்துடன் இணைக்கும் நோக்கில், ஒரு...

Weather Forecast Oct 11 2025
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாட்டின் பல பகுதிகளில் மழை: சில இடங்களில் 50 மி.மீ வரை பலத்த மழை பெய்யக்கூடும்!

நாட்டின் பல மாகாணங்களில் இன்றும் மழை பெய்யக்கூடிய வானிலை நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் முன்னறிவிப்பு விடுத்துள்ளது....

NAMAL
செய்திகள்அரசியல்இலங்கை

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் நாமல் ராஜபக்ச: வாக்குமூலம் அளிக்க நேரில் முன்னிலை!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) தேசிய அமைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச சற்று முன்னர்...

PSX 20260202 191816
செய்திகள்அரசியல்இலங்கை

எனக்கும் கெஹெல்பத்தர பத்மேவுக்கும் தொடர்பில்லை! – CID விசாரணையில் பிரசன்ன ரணதுங்க விளக்கம்.

திட்டமிட்ட குற்றச்செயல்களை வழிநடத்தியதாகக் கருதப்படும் ‘கெஹெல்பத்தர பத்மே’ தொடர்பான விசாரணைகளுக்காக, முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க...