uththara scaled
இந்தியாசெய்திகள்

உத்தர பிரதேசத்தில் வன்முறை – 8 பேர் பலி!

Share

உத்தர பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற வன்முறையில் 4 விவசாயிகள் உட்பட 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

உத்தர பிரதேசம் லக்கிம்பூர் பகுதியில் விவசாயிகள் போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் 4 விவசாயிகள் உட்பட 8 பேர் உயிரிழந்ததாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

உத்தர பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரி என்ற இடத்தில் மாநில துணை முதலமைச்சர் பங்கேற்கும் விழா நடைபெறும் இடம் அருகே விவசாயிகளின் போராட்டம் ஒன்று நடைபெற்றது. அப் பகுதிக்கு வருகை தர இருந்த துணை முதலமைச்சருக்கு எதிர்ப்பு தெரிவிக்குமுகமாக விவசாயிகள் திரண்டிருந்தனர்.

மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா துணை முதலமைச்சரை வரவேற்க தனது காரில் சென்ற வேளை  அவரது காரையும் மறித்து விவசாயிகள் கோஷங்கள் எழுப்பியதாகக் கூறப்படுகிறது. விவசாயிகளை இடித்து தள்ளியபடி அங்கிருந்து காரை எடுத்துச் சென்றுள்ளார் ஆஷிஷ் மிஸ்ரா. இதில் விவசாயிகள் சிலர் படுகாயம் தாகவும்  இருவர் பலியாகியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.இச் சம்பவத்தில் ஆத்திரமடைந்த விவசாயிகள் ஆஷிஷ் மிஸ்ராவின் கார் உட்பட சில கார்களை தீயிட்டு கொளுத்தியுள்ளனர்.இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவியது.

மேலும் இவ்வன்முறையில் 4 விவசாயிகள் உட்பட 8 பேர் உயிரிழந்தாக பொலீஸார் தெரிவிக்கின்றார்கள்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
27 5
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எண்ணெய் மற்றும் தேங்காய் விலை உயர்வு: பேக்கரி மற்றும் உணவு உற்பத்தியாளர்கள் கடும் பாதிப்பு!

உள்நாட்டுச் சந்தையில் பாம் ஒயில் (Palm Oil) மற்றும் தேங்காய் உள்ளிட்ட அத்தியாவசிய எண்ணெய் பொருட்களின்...

26 6
செய்திகள்உலகம்

மைக்கேல் ஜாக்சன் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள்: எஸ்டேட் மற்றும் காசியோ குடும்பத்தினரிடையே சட்டப் போர் தீவிரம்!

மறைந்த பாப் இசை மேதை மைக்கேல் ஜாக்சன் மீது, ஃபிராங்க் காசியோ மற்றும் அவரது உடன்பிறப்புகள்...

25 6
செய்திகள்உலகம்

உலகின் வலிமையான ‘T1200’ கார்பன் ஃபைபரை அறிமுகப்படுத்தியது சீனா: விண்வெளித் துறையில் புதிய மைல்கல்!

சீனா தனது உள்நாட்டுத் தயாரிப்பான T1200-தரத்திலான அதி-உயர்-வலிமை கார்பன் ஃபைபரை புதன்கிழமை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. அரசுக்குச்...

24 9
செய்திகள்உலகம்

சீனாவின் புதிய ‘இன ஒற்றுமை’ சட்டம்: சிறுபான்மையினரின் கலாச்சார அடையாளத்திற்கு அச்சுறுத்தலா?

சீனா அண்மையில் “இன ஒற்றுமையை” மேம்படுத்துவதாகக் கூறி புதிய சட்டமொன்றை அங்கீகரித்துள்ளது. ஹான் சீனர்களின் ஆதிக்கம்...