suicide 1
இந்தியாசெய்திகள்

மனைவியைக் கொன்று தானும் உயிரை விட்ட கணவரின் சோகக் கதை

Share

உடல்நலம் குன்றிய மனைவியை சரிவரக் கவனிக்க முடியவில்லை என்பதால் மனைவியைக் கொன்றுவிட்டு கணவன் தற்கொலை செய்துகொண்டார்.

இச்சம்பவமானது கேரளாவில் இடம்பெற்றுள்ளது.

கேரள மாநிலம் ஆலப்புழை மாவட்டம் குட்டநாடு பகுதியைச் சேர்ந்த ஜோசப் (80), என்பவர் விவசாயி. இவரது மனைவி லீலாம்மா (75), இந்த தம்பதிகளுக்கு 5 மகள்கள் இருந்தாலும், அவர்கள் அனைவரும் திருமணமாகி வேறு இடங்களில் வசிக்கின்றனர்.

இந்த நிலையில் 10 ஆண்டுகளாக மனைவி உடல் நலம் குன்றிய நிலையில் படுத்த படுக்கையாக இருந்த நிலையில் கணவன் தான் கவனித்து வந்துள்ளார்.

கடந்த சில மாதங்களாக வயதான காரணத்தால் மனைவியை சரிவர கவனிக்க ஜோசப்பால் முடியவில்லை.

நேற்று வீட்டுச் சுற்றுப்புற பகுதியில் உள்ள ஒரு மரத்தில் ஜோசப் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். தகவலறிந்த பொலிஸார் ஜோசப் உடலை கைப்பற்றிய நிலையில் ஜோசப் மனைவி லீலாம்மா ஒரு அறையில் இறந்த நிலையில் காணப்பட்டுள்ளார்.

மனைவியைக் கொலை செய்துவிட்டு நான் தற்கொலை செய்து கொள்ளப் போகிறேன், என ஜோசப் எழுதிய கடிதம் பொலிஸாருக்குக் கிடைத்துள்ளது.

இதனை ஆதாரமாக வைத்து இரு உடல்களையும் கைப்பற்றிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

#IndiaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...