அடுத்தடுத்து இரண்டு வீட்டின் பூட்டை உடைத்துக் கொள்ளையில் ஈடுபட்ட 4 மர்ம நபர்களை பொலிஸார் வலைவீசித் தேடிவருகின்றனர்.
இராமநாதபுரம் மாவட்டம் மேலக்கோட்டை கிராமத்தில் இச்சம்பவம் தொடர்பாக சிசிடிவி உதவியுடன் பொலிஸார் தேடி வருகின்றனர்.
பூட்டப்பட்டு இருந்த சீனி முகம்மது என்பவரின் வீட்டை உடைத்து 15 ஆயிரம் ரூபா பணம், மற்றும் தங்க காசுகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்துக்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.
மேலும், அதேபகுதியில் மற்றொரு பூட்டப்பட்ட வீட்டில் புகுந்த மர்ம நபர்கள், பீரோவை உடைத்து 40 பவுண் தங்க நகை, 50 ஆயிரம் ரூபா பணத்தை திருடிச் சென்றுள்ளனர்.
இதேவேளை வீட்டின் உரிமையாளர்கள் இல்லாதமையைக் கண்காணித்து இக்கொள்ளைச் சம்பவம் இடம்பெறுள்ளது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
#IndiaNews