marriage parents
இந்தியாசெய்திகள்

தாலியைக் கழற்றி எறிந்து மகளை அழைத்துச்சென்ற பெற்றோர்: உயிரைவிட்ட காதலன்

Share

காதலிக்கு தாலி கட்டி மனைவியாக்கிய நிலையில் பொலிஸ் நிலையத்தில் வைத்து பிரிந்ததால் கணவன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இந்தியா- நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி சிவன் கீழவீதி பகுதியைச் சேர்ந்த அரவிந்த்குமாரும் (வயது 26) அதேபகுதியைச் சேர்ந்த சிவநந்தினி (வயது 22) என்பவரும் கடந்த 03 வருடங்களுக்கு மேலாக காதலித்து வந்துள்ளனர்.

வழமைபோன்று இவர்களது காதலுக்கும் இருவீட்டார் மத்தியில் எதிர்ப்பு ஏற்பட்டமையைத் தொடர்ந்து, வெளியூருக்குச் சென்று கோவிலில் தாலிக்கட்டி திருமணம் செய்து கொண்டனர்.

இந்தநிலையில் மகள் சிவநந்தினியை காணவில்லை என கடந்த 11ஆம் திகதி வேளாங்கண்ணி பொலிஸ் நிலையத்தில் பெண் வீட்டார் முறைப்பாடு ஒன்றினை வழங்கியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து திருமணமான அரவிந்த்குமார் மற்றும் சிவநந்தினி ஆகியோர் கடந்த 19 ஆம் திகதி வேளாங்கண்ணி பொலிஸ் நிலையத்திற்குச் சென்றுள்ளனர்.

அப்போது பொலிஸ் நிலையத்தில் அரவிந்த்குமார் அவரது தாயார் விஜயலட்சுமி ஆகியோரை, பெண் வீட்டாரான சிவநந்தினியின் தந்தை ராஜேந்திரன், அவருடைய உறவினர்கள் மிரட்டி, தாலியைக் கழற்றி பொலிஸ் நிலையத்தில் வீசியதுடன், பெண்ணையும் அச்சுறுத்தி வீட்டிற்கு பெண் வீட்டார் அழைத்துச் சென்றுள்ளனர்.

இந்தநிலையில் காதலி பிரிந்த சோகத்தில் இருந்த அரவிந்த்குமார் தூக்கு போட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இதனைத்தொடர்ந்து பொலிஸார் மேலதிக விசாரணையினை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே சிவனந்தினி கழுத்தில் கட்டப்பட்ட தாலி வேளாங்கண்ணி காவல் நிலைய வாசலில் வீசிய எறியப்பட்டு கிடக்கும் காட்சிகள், அரவிந்த்குமார் மற்றும் சிவநந்தினி ஆகியோர், தாலிக்கட்டி கோவிலில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள், இரத்தத்தால் எழுதப்பட்ட காதல் கடிதங்கள் ஆகியவைகள் வெளியாகியுள்ளன.

#IndiaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
images 8
செய்திகள்இலங்கை

யாழ். செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு ஒத்திவைப்பு: மழை காரணமாக அடுத்த ஆண்டு ஜனவரி 19-இல் மீண்டும் ஆராய முடிவு!

யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் குறித்துத் தீர்மானம் ஒன்று எடுக்கப்பட்டுள்ளது....

image d1460108ca
இலங்கைசெய்திகள்

உயிர் அச்சத்துடன் பயணிக்கும் மக்கள்: ஒட்டுசுட்டான் பனிக்கன்குளத்தில் தொடருந்து கடவை அமைக்கக் கோரிக்கை!

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம் கிராம அலுவலர் பிரிவில், தொடருந்து கடவை...

25 690859776f0a2
செய்திகள்இலங்கை

காவல்துறைக் காவலில் இருந்த சந்தேகநபர் உயிரிழப்பு: கந்தேகெட்டிய சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகள்!

நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட இரண்டு பிடியாணைகளின் பேரில் கைது செய்யப்பட்ட 46 வயதுடைய சந்தேக நபர் ஒருவர்,...