dog getting
இந்தியாசெய்திகள்

கொரோனா தடுப்பூசிக்கு பதிலாக நாய் தடுப்பூசி!

Share

கொரோனா தடுப்பூசி ஏற்றச் சென்றவருக்கு வெறிநாய் கடிக்கு ஏற்றப்படுகின்ற ஊசியை வைத்தியர் ஒருவர் ஏற்றியுள்ளார்.

இந்தச் சம்பவம் இந்தியாவில் மகாராஷ்டிராவில் உள்ள மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது.

கொரோனாத் தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்காக சுகாதார நிலையம் ஒன்றுக்கு குறித்த நபர் சென்றுள்ளார்.

இதன்போது அங்கு பணியில் இருந்த வைத்தியர் குறித்த நபருக்கு தடுப்பூசி செலுத்தியுள்ளார்.

அதன்பின்னர் மருந்து போத்தலை கவனித்தபோது அது கொரோனாவுக்கான தடுப்பூசி அல்ல வெறிநாய் கடிக்கு செலுத்தப்படும் ஊசி மருந்து என தெரியவந்துள்ளது.

இதனையடுத்து குறித்த நபர் முறைப்பாடு செய்ததை அடுத்து சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

அத்துடன் குறித்த வைத்தியரும் தாதியும் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் பாதிக்கப்பட்டவருக்கு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு தற்போது அவர் நலமுடன் இருக்கிறார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
13 12
உலகம்செய்திகள்

தமிழின அழிப்பை மறுப்பவர்களுக்கு கனடாவில் இடமில்லை! பிரம்டன் மேயர் ஆவேசப் பேச்சு

இலங்கையில் தமிழர்கள் இனவழிப்பு செய்யப்படவில்லை என்பவர்களுக்கு கனடாவில் இடமில்லை என பிரம்டன் முதல்வர் பட்ரிக் பிரவுண்...

12 13
இலங்கைசெய்திகள்

இந்திய – பாகிஸ்தான் போர்நிறுத்த ஒப்பந்தம் குறித்து இலங்கையின் நிலைப்பாடு

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் எட்டப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தைப் பாராட்டி ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க...

11 12
இலங்கைசெய்திகள்

சிங்கள நடிகை செமினி இதமல்கொடவிற்கு பிணையில் செல்ல அனுமதி

வெலிக்கடை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நடிகை செமினி இதமல்கொடவிற்கு பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொழும்பு...

10 15
இலங்கைசெய்திகள்

இறம்பொடை பேருந்து விபத்துக்கான காரணம் தொடர்பில் பொலிஸார் விசாரணை

கொத்மலை கரண்டியெல்ல பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்துக்கான காரணம் சாரதியின் அலட்சியமா அல்லது பேருந்தின் தொழில்நுட்பக்...