தாயின் உடலை 4 கிமீ தூரம் சுமந்து சென்று 4 மகள்கள் இறுதிச் சடங்கு செய்துள்ளனர்.
ஒடிசா மாநிலம் பூரி நகரில் உள்ள மங்களகாட் பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. தாயின் இறுதிச் சடங்கில் இரு மகன்கள் கலந்து கொள்ளாததை அடுத்து, மகள்கள் இறுதிச் சடங்கை செய்துள்ளனர்.
ஜதி நாயக் என்ற மூதாட்டி நேற்று காலமானார். இவருக்கு 2 மகன்களும் 4 மகள்களும் உள்ளனர்.
இவரது மகள்களுக்கு திருமணமாகிவிட்ட நிலையில், அவரது மகன்களும் அவர்களது குடும்பத்தினரும் தனித்தனியாக வசிக்கின்றனர்.
கடந்த 10 வருடங்களாக தாயை அவரது மகன்கள் புறக்கணித்து வந்தனர் எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில் மூதாட்டி இறந்ததைமையை அயலவர்கள் இரண்டு மகன்களுக்கும் தகவல் தெரிவித்தனர்.
இருப்பினும், இறுதிச் சடங்குகளை செய்ய வரவில்லை. இந்த நிலையில் கலாசாரத் தடைகளை உடைத்து மூதாட்டியின் மகள்கள் 4 பேரும் தங்கள் தாயை தகனம் செய்துள்ளனர்.
#IndiaNews
Leave a comment