corona scaled
இந்தியாசெய்திகள்

இந்தியாவில் ஒரே நாளில் 666 பேரைப் பலியெடுத்த கொரோனா!!

Share

இந்தியாவில் நேற்று மட்டும் 666 பேர் கொரோனாத் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளனர்.

அதேவேளை 16 ஆயிரத்து 326 பேருக்கு நேற்றையதினம் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

உலகளாவிய ரீதியில் கொரோனா வைரஸ் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்தியாவிலும் அதிக பாதிப்புக்கள் பதிவாகியிருந்தன.

இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பாக இந்தியாவில் கொரோனாத் தொற்றினால் பலர் உயிரிழந்திருந்தனர்.

தற்போது பலத்த பிரயத்தனங்களுக்கு மத்தியில், கொரோனாப் பாதிப்பு எண்ணிக்கை அங்கு ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

நேற்று ஒரு நாளில் 16 ஆயிரத்து 326 பேருக்குக் கொரோனாத் தொற்று ஏற்பட்டுள்ளதுடன், கேரள மாநிலத்தில் மாத்திரம் 9 ஆயிரத்து 361 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.

இந்தியா முழுவதும் தற்போது தொற்றுக்குள்ளான 1,73,728 பேர் அங்கு சிகிச்சை பெற்று வரும் நிலையில், இதுவரை 101.30 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

#INDIA

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
21 10
இலங்கைசெய்திகள்

இலங்கையில் உள்ள தாதியர்களுக்கு வெளியான மகிழ்ச்சித் தகவல்

இலங்கையில் மிக விரைவில் தாதியருக்கான பல்கலைக்கழகம் ஒன்று அமைக்கப்படும் என்று சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை...

22 9
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபையின் மேயரை நியமிப்பில் எடுக்கப்பட்ட தீர்மானம்

கொழும்பு மாநகர சபையின் மேயர் மற்றும் பிரதி மேயரை தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பு ஒன்று அடுத்த மாதம்...

20 15
இலங்கைசெய்திகள்

மகிந்தவை திடீரென சந்திக்க சென்ற ரணில்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சந்திக்க முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவரது வீட்டிற்கு சென்றுள்ளார்....

16 16
இலங்கைசெய்திகள்

தேடப்பட்டு வந்த டீச்சர் அம்மாவுக்கு பிணை அனுமதி

தரம் 5 புலமைப்பரிசில் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு பிரத்யேக வகுப்புகளை நடத்தும், ‘டீச்சர் அம்மா’ என்று...