சில்லி சிக்கன் சாப்பிடும் போட்டி: 40 பேருக்கு ஏற்பட்ட சிக்கல்!

Chili Chicken

தமிழ்நாடு – தருமபுரியில் ஊரடங்கை மீறி சிக்கன் சாப்பிடும் போட்டி நடத்திய 40 பேர் மீது பொலிஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தருமபுரி மாவட்டம் – முக்கல்நாய்க்கன்பட்டி கிராமத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒரு கிலோ சில்லி சிக்கன் சாப்பிடும் போட்டி நடாத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஒரே இடத்தில் பந்தல் அமைத்து, 15 கிலோ சிக்கனை 15 பேருக்கு பரிமாறி போட்டியானது முன்னெடுக்கப்பட்டது.

கொவிட் தொற்று அதிகமாகப் பரவிவரும் நிலை காரணமாக ஊரடங்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்ட நிலையில், சமூக இடைவெளியின்றி ஒரு கிலோ சில்லி சிக்கனை இளைஞர்கள் அமர்ந்து சாப்பிட்டுள்ளனர்.

அத்துடன், பிரியாணி சாப்பிடும் போட்டியும் நடாத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கொவிட்-19 ஊரடங்கு விதிகளை மீறியதாகவும், தொற்று பரவும் வகையில் கூட்டத்தை கூட்டியதாகவும், விழாவின் ஏற்பாடு செய்தவர்கள் மற்றும் போட்டியில் பங்கேற்றவர்கள் உள்ளிட்ட 40 பேர் மீது பொலிஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

#IndiaNews

Exit mobile version