uththara scaled
இந்தியாசெய்திகள்

உத்தர பிரதேசத்தில் வன்முறை – 8 பேர் பலி!

Share

உத்தர பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற வன்முறையில் 4 விவசாயிகள் உட்பட 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

உத்தர பிரதேசம் லக்கிம்பூர் பகுதியில் விவசாயிகள் போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் 4 விவசாயிகள் உட்பட 8 பேர் உயிரிழந்ததாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

உத்தர பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரி என்ற இடத்தில் மாநில துணை முதலமைச்சர் பங்கேற்கும் விழா நடைபெறும் இடம் அருகே விவசாயிகளின் போராட்டம் ஒன்று நடைபெற்றது. அப் பகுதிக்கு வருகை தர இருந்த துணை முதலமைச்சருக்கு எதிர்ப்பு தெரிவிக்குமுகமாக விவசாயிகள் திரண்டிருந்தனர்.

மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா துணை முதலமைச்சரை வரவேற்க தனது காரில் சென்ற வேளை  அவரது காரையும் மறித்து விவசாயிகள் கோஷங்கள் எழுப்பியதாகக் கூறப்படுகிறது. விவசாயிகளை இடித்து தள்ளியபடி அங்கிருந்து காரை எடுத்துச் சென்றுள்ளார் ஆஷிஷ் மிஸ்ரா. இதில் விவசாயிகள் சிலர் படுகாயம் தாகவும்  இருவர் பலியாகியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.இச் சம்பவத்தில் ஆத்திரமடைந்த விவசாயிகள் ஆஷிஷ் மிஸ்ராவின் கார் உட்பட சில கார்களை தீயிட்டு கொளுத்தியுள்ளனர்.இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவியது.

மேலும் இவ்வன்முறையில் 4 விவசாயிகள் உட்பட 8 பேர் உயிரிழந்தாக பொலீஸார் தெரிவிக்கின்றார்கள்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
30 4
உலகம்செய்திகள்

நீண்ட இடைவெளிக்குப் பின் சீனா – வடகொரியா பயணிகள் தொடருந்து சேவை நாளை மீள ஆரம்பம்!

கோவிட்-19 பெருந்தொற்று பரவல் காரணமாக கடந்த ஆறு ஆண்டுகளாக இடைநிறுத்தப்பட்டிருந்த சீனா மற்றும் வடகொரியா இடையிலான...

29 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பேலியகொட மீன் சந்தை கழிவு உரம் தயாரிப்பு: பொது சுகாதார பரிசோதகர் விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு!

பேலியகொட மெனிங் மீன் சந்தையில் எஞ்சியிருக்கும் மீன்களைப் பயன்படுத்தி தனியார் நிறுவனம் ஒன்று உரம் தயாரிக்கும்...

28 4
செய்திகள்விளையாட்டு

2026 உலகக்கோப்பை கால்பந்து தொடரிலிருந்து ஈரான் விலகல்: விளையாட்டுத்துறை அமைச்சர் அறிவிப்பு!

அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளின் கூட்டுத் தலைமையின்கீழ் நடைபெறவுள்ள 2026 உலகக்கோப்பை கால்பந்து...

27 4
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணை பதற்றம்: மசகு எண்ணெய் விலை 200 டொலரை எட்டக்கூடும் என ஈரான் எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் நிலவும் தீவிர போர்ச் சூழல் மற்றும் ஹோர்முஸ் நீரிணையில் வர்த்தகக் கப்பல்கள் மீது...