1755821 boat
இந்தியா

கேரளாவில் நடக்கும் பிரமாண்ட படகு போட்டி நாளை நடக்கிறது! ஏராளமானோர் வருகை

Share

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் புன்னமடா ஏரியில் நடைபெறும் நேரு டிராபி படகுப்போட்டியை காண உள்நாடு மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமானோர் வருவது வழக்கம்.

இந்நிலையில் ஒலிம்பிக்ஸ் ஆன் வாட்டர்’ என்று அழைக்கப்படும் 68வது பந்தயப்போட்டி புன்னமடா ஏரியில் நாளை (4 திகதி) நடைபெற உள்ளது.

இதில் பங்கேற்க ஏராளமான படகு குழாம் கழகங்கள் தயாராகி உள்ளன. இதுவரை 20 பாம்பு படகுகள் உள்பட 77 படகுகள் பங்கேற்க பதிவு செய்துள்ளன.

நாளை மதியம் 2.30 மணிக்கு, கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் போட்டியை தொடங்கி வைக்கிறார். தொடக்க விழாவுக்குப் பிறகு, போட்டிகள் 3 மணிக்குத் தொடங்குகிறது.

ஹீட் சுற்றுகள் தலா 4 அணிகளுடன் நடத்தப்படும். இதில் முதலாவதாக வரும் அணிகள் இறுதிப்போட்டியில் போட்டியிடும். இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் பாம்பு படகுக்கு நேரு கோப்பை வழங்கப்படுகிறது.

தற்போது வரை டிக்கெட் விற்பனை ரூ.23 லட்சத்தை எட்டியுள்ளது. இது ரூ. 50 லட்சத்தை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

போட்டியை காண ஏராளமானோர் கேரளா வந்துள்ளதால் போட் ஹவுசுகள், ஓட்டல்கள் மற்றும் ஓய்வு விடுதிகள் நிறைந்துள்ளன.

இந்தப் போட்டியில் பங்கேற்க தலா ரூ.80 லட்சம் வரை படகு குழாம்கள் செலவழிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

#kerala

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
english lokshahi 2026 02 04 1vn53foh Mumbai
செய்திகள்இந்தியா

மும்பை விமான நிலையத்தில் நடுக்கம்: இரண்டு ஏர்பஸ் விமானங்கள் மோதி விபத்து!

இந்தியாவின் மிக முக்கியமான விமான நிலையங்களில் ஒன்றான மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான...

delivery20
செய்திகள்இந்தியா

டெல்லியில் பயங்கரம்: உணவு டெலிவரி ஊழியர்கள் ஹெல்மெட்டாலேயே தாக்கி தொழிலதிபர் கொலை!

நாட்டின் தலைநகரான டெல்லியில், உணவு டெலிவரி செய்யும் ஊழியர்களுடனான மோதலில் படுகாயமடைந்த தொழிலதிபர் ஒருவர் சிகிச்சை...

Trump Modi.jpg
செய்திகள்இந்தியா

மோடி – ட்ரம்ப் தொலைபேசி உரையாடல் பலன் அளித்தது: இந்தியப் பொருட்கள் மீதான வரியை 18% ஆகக் குறைத்தது அமெரிக்கா!

இந்தியா மற்றும் அமெரிக்கா நாடுகளுக்கு இடையே நிலவி வந்த வர்த்தக முறுகல் முடிவுக்கு வந்துள்ளதோடு, இரு...

MediaFile 4
செய்திகள்இந்தியா

பிரதமர் மோடி – எப்ஸ்டீன் வதந்தி: குற்றவாளியின் ஆதாரமற்ற உளறல இந்திய வெளியுறவுத்துறை கடும் சாடல்!

அமெரிக்காவின் பாலியல் குற்றவாளி ஜெப்ரி எப்ஸ்டீன் தொடர்பான வழக்கில் வெளியிடப்பட்ட ஆவணங்களில் இந்தியப் பிரதமர் நரேந்திர...