பொருளாதார முன்னேற்றத்தை நோக்கி இந்தியா வேகமாகப் பயணித்து வருகின்றது என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
‘மன் கி பாத்’ நிகழ்ச்சியின் மூலம் நாட்டு மக்களிடம் இன்று அவர் உரையாற்றும்போதே மேற்கண்டவாறு கூறினார்.
அவர் பேசியதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:-
* பொருளாதார முன்னேற்றத்தை நோக்கி இந்தியா வேகமாகப் பயணித்து வருகிறது. கனவை நனவாக்க மிகப்பெரிய அளவில் இந்தியவர்கள் சிந்தித்து உழைத்து வருகின்றனர்.
* 400 பில்லியன் அமெரிக்க டொலர்களைத் தாண்டிய இந்திய ஏற்றுமதிகள் நம்மை பெருமைப்பட வைத்துள்ளது. இது நாட்டின் ஆக்கத்தையும், திறனையும் குறிக்கின்றது.
* இந்தியாவில் இருந்து புதிய தயாரிப்புகள் புதிய இடங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்திய தயாரிப்புகள் இப்போது வெளிநாடுகளில் அதிகம் கவனத்தைப் பெற்றுள்ளன.
* நமது விவசாயிகள், இளைஞர்கள், சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை நான் பாராட்டுகின்றேன்.
* பெரிய நிறுவனங்கள் மட்டுமே அரசுக்குப் பொருட்களை விற்க முடியும் என்று முன்பு நம்பப்பட்டது. ஆனால் இ – மார்க்கெட் இணையதளம் இதை மாற்றியுள்ளது. இது இந்தியாவின் புதிய உத்வேகத்தை விளக்குகிறது.
* சமீபத்தில் முடிவடைந்த பத்ம விருதுகளில், பாபா சிவானந்தாவைப் பார்த்திருப்பீர்கள். அவருடைய வீரியம் மற்றும் உடற்தகுதியைப் பார்த்து அனைவரும் ஆச்சரியப்பட்டனர். நாட்டில் அவரது உடல்நிலை விவாதப் பொருளாக உள்ளது. அவர் யோகாவில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர்.
* சமீபத்திய ஆண்டுகளில் ஊக்கமளிக்கும் போக்குகளில் ஒன்று, ஆயுஷ் துறையில் பல ஸ்டார்ட் அப்கள் மற்றும் நிறுவனங்களின் எழுச்சி மற்றும் வெற்றியாகும்.
* ஏக் பாரத், ஸ்ரேஷ்டா பாரதத்தின் உணர்வின் வெளிப்பாடான குஜராத்தின் கடலோரப் பகுதியில் நடக்கும் கண்காட்சியைப் பற்றி எத்தனை பேருக்குத் தெரியும்.
* டாக்டர் அம்பேத்கருடன் தொடர்புடைய பஞ்ச தீர்த்தங்களுக்குச் சென்றதை நான் பெருமையாக உணர்கின்றேன். இந்த எழுச்சியூட்டும் இடங்களைப் பார்வையிடுமாறு உங்கள் அனைவரையும் நான் கேட்டுக்கொள்கிறேன்.
* பெண் குழந்தைகளின் கல்வியை மேலும் மேம்படுத்தி, பெண்கள் அதிகாரத்தை வலுப்படுத்துவோம்.
– இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
#IndiyanNews
Leave a comment