67349548 2083714531925410 2617361488318300160 n
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெண்களின் அரசியல் பங்கேற்பை அதிகரிப்பது காலத்தின் கட்டாயம் – மயில்வாகனம் திலகராஜ்

Share

பெண்களின் அரசியல் பங்கேற்பை உறுதி செய்யவும், சமவாய்ப்புக்களை வழங்கவும் “மலையக அரசியல் அரங்கம்” தன் ஒருமைபாட்டை வழங்கும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜ் தெரிவித்துள்ளார்.

பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு சர்வதேச தினத்தை முன்னிட்டு Search for Common Grounds நிறுவனத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட கலந்துரையாடலில் கலந்து சிறப்பித்தபோதே அவர் மேற்படி தெரிவித்தார்.

குறித்த நிகழ்வில் உரையாற்றிய அவர் மேலும் தெரிவிக்கையில்,

மலையக அரசியல் அரங்க இலட்சினையில் மலையக தேச பிதா கோ. நடேசய்யருக்கு தோள்கொடுத்து அரசியல் செயற்பாட்டில் இயங்கிய அவரது துணைவியார் மீனாட்சியம்மையையும் இணைத்துள்ளோம்

பெண்களின் அரசியல் பங்கேற்பினை அதிகரிப்பது காலத்தின் கட்டாயம். சம வாய்ப்புக்கள் வழங்கப்படுகின்றபோதே ஒட்டு மொத்த அரசியல் அரங்கமும் முழுமையடையும் – என சுட்டிக்காடினார்.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
15 21
இலங்கைசெய்திகள்

கனடா தமிழ் இனப்படுகொலை நினைவுச்சின்னம் பயங்கரவாதத்தின் இருண்ட நிழல்களே..! மகிந்த தெரிவிப்பு

கனடாவின் பிரம்டனில் சமீபத்தில் ஈழ வரைபடத்தை சித்தரிக்கும் தமிழ் இனப்படுகொலை நினைவுச்சின்னம் என அழைக்கப்படும், நினைவக...

14 20
இலங்கைசெய்திகள்

மகிந்த தலைமையிலான படைவீரர்களை நினைவுகூரும் நிகழ்விற்கு அனுமதி மறுப்பு

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையில் படைவீரர்களை நினைவுகூரும் நிகழ்வு ஒன்றை நடத்துவதற்கு அனுமதி மறுக்கப்பட்டதாக...

13 20
இலங்கைசெய்திகள்

முள்ளிவாய்க்காலுக்கு கொண்டு வரப்பட்ட சிறைக் கூடு

30 வருடத்திற்கும் மேலாக நீடித்த உரிமை கோரிய யுத்தம் மௌனிக்கப்பட்டு இன்று 16 வருடங்கள் நிறைவடைகின்றன....

12 21
செய்திகள்

முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலை! பிரித்தானியாவிலிருந்து வந்த செய்தி

முள்ளிவாய்க்காலில் துன்புற்ற அனைவருக்குமாக நாங்கள் தொடர்ந்தும் நீதிக்காக அமைதிக்காக பொறுப்புக்கூறலிற்காக போராடுவோம் என பிரித்தானிய நாடாளுமன்ற...