ht4451702524
செய்திகள்இலங்கை

கிளிநொச்சியில் அதிகரிக்கும் சிறுவர் துஸ்பிரயோகம்!!

Share

கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த ஆண்டு காலப்பகுதியை விட இவ் ஆண்டு இதுவரையான காலப்பகுதியில் சிறுவர்கள் மீதான பாலியல் துஸ்பிரயோகம் அதிகரித்துள்ளது.

இவ்வாறு பொலிஸ் திணைக்கள தகவல்கள் தெரிவித்துள்ளன.

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கிளிநொச்சி மாவட்டத்தில் சிறுவர் துஸ்பிரயோக சம்பவங்கள், சிறுவர்கள் மீதான துன்புறுத்தல்கள் மற்றும் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் என்பவை தொடர்பான முறைப்பாடுகள் அண்மைய நாள்களாக அதிகளவில் கிடைக்கப்பெற்றுள்ளன.

கிளிநொச்சி மாவட்டத்தின் தர்மபுரம், இராமநாதபுரம், அக்கராயன், ஜெயபுரம், நாச்சிக்குடா, பூநகரி, பளை மற்றும் கிளிநொச்சி உள்ளிட்ட 8 பொலிஸ் நிலையங்களில் சிறுவர்கள் மீதான பாலியல் துஸ்பிரயோகங்கள் மற்றும் சிறுவர் துன்புறுத்தல்கள் தொடர்பில் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன

கிளிநொச்சி மாவட்டத்தில், கடந்த 2020 ஆம் ஆண்டு காலப்பகுதியில், 7 சிறுவர்கள் பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டிருந்தனர்.

ஆயினும், இந்த ஆண்டின் ஜனவரி முதல் இதுவரையான காலப்பகுதியில் சுமார் 20 சிறுவர்கள் பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.

இந்த துஸ்பிரயோக சம்பவங்களைத் தவிர்த்து, சிறுவர்களைத் துன்புறுத்துதல் மற்றும் சிறுவர்களுக்கு காயம் விளைவித்தல் போன்ற பல்வேறு முறைப்பாடுகளும் அதிக அளவில் பதிவாகியுள்ளன. – என்றுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
15 21
இலங்கைசெய்திகள்

கனடா தமிழ் இனப்படுகொலை நினைவுச்சின்னம் பயங்கரவாதத்தின் இருண்ட நிழல்களே..! மகிந்த தெரிவிப்பு

கனடாவின் பிரம்டனில் சமீபத்தில் ஈழ வரைபடத்தை சித்தரிக்கும் தமிழ் இனப்படுகொலை நினைவுச்சின்னம் என அழைக்கப்படும், நினைவக...

14 20
இலங்கைசெய்திகள்

மகிந்த தலைமையிலான படைவீரர்களை நினைவுகூரும் நிகழ்விற்கு அனுமதி மறுப்பு

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையில் படைவீரர்களை நினைவுகூரும் நிகழ்வு ஒன்றை நடத்துவதற்கு அனுமதி மறுக்கப்பட்டதாக...

13 20
இலங்கைசெய்திகள்

முள்ளிவாய்க்காலுக்கு கொண்டு வரப்பட்ட சிறைக் கூடு

30 வருடத்திற்கும் மேலாக நீடித்த உரிமை கோரிய யுத்தம் மௌனிக்கப்பட்டு இன்று 16 வருடங்கள் நிறைவடைகின்றன....

11 20
இலங்கைசெய்திகள்

யுத்த வெற்றிக் கொண்டாட்டங்களில் கலந்துக்கொள்ளவுள்ள அநுர..!

கொழும்பில் நாளை (19) நடைபெறவுள்ள யுத்த வெற்றிக் கொண்டாட்டங்களில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கலந்து கொள்ளவுள்ளதாக...