ht4451702524
செய்திகள்இலங்கை

கிளிநொச்சியில் அதிகரிக்கும் சிறுவர் துஸ்பிரயோகம்!!

Share

கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த ஆண்டு காலப்பகுதியை விட இவ் ஆண்டு இதுவரையான காலப்பகுதியில் சிறுவர்கள் மீதான பாலியல் துஸ்பிரயோகம் அதிகரித்துள்ளது.

இவ்வாறு பொலிஸ் திணைக்கள தகவல்கள் தெரிவித்துள்ளன.

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கிளிநொச்சி மாவட்டத்தில் சிறுவர் துஸ்பிரயோக சம்பவங்கள், சிறுவர்கள் மீதான துன்புறுத்தல்கள் மற்றும் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் என்பவை தொடர்பான முறைப்பாடுகள் அண்மைய நாள்களாக அதிகளவில் கிடைக்கப்பெற்றுள்ளன.

கிளிநொச்சி மாவட்டத்தின் தர்மபுரம், இராமநாதபுரம், அக்கராயன், ஜெயபுரம், நாச்சிக்குடா, பூநகரி, பளை மற்றும் கிளிநொச்சி உள்ளிட்ட 8 பொலிஸ் நிலையங்களில் சிறுவர்கள் மீதான பாலியல் துஸ்பிரயோகங்கள் மற்றும் சிறுவர் துன்புறுத்தல்கள் தொடர்பில் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன

கிளிநொச்சி மாவட்டத்தில், கடந்த 2020 ஆம் ஆண்டு காலப்பகுதியில், 7 சிறுவர்கள் பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டிருந்தனர்.

ஆயினும், இந்த ஆண்டின் ஜனவரி முதல் இதுவரையான காலப்பகுதியில் சுமார் 20 சிறுவர்கள் பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.

இந்த துஸ்பிரயோக சம்பவங்களைத் தவிர்த்து, சிறுவர்களைத் துன்புறுத்துதல் மற்றும் சிறுவர்களுக்கு காயம் விளைவித்தல் போன்ற பல்வேறு முறைப்பாடுகளும் அதிக அளவில் பதிவாகியுள்ளன. – என்றுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
istockphoto 464705134 612x612 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வீதிகளில் ரேஸ் செல்லும் இளைஞர்களுக்கு எச்சரிக்கை: மோட்டார் சைக்கிள்களை அரசுடைமையாக்க பொலிஸ் மா அதிபர் உத்தரவு!

பிரதான வீதிகளில் பாதுகாப்பற்ற முறையில் மோட்டார் சைக்கிள்களை செலுத்தும் அனைத்து நபர்களையும் உடனடியாகக் கைது செய்யுமாறு...

rfv 1 10d
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தேர்தலை நடத்தாமல் இருப்பதை ஏற்க முடியாது: யாழில் தமிழ் கட்சிகள் கூடிப் பேச்சு!

மாகாண சபைத் தேர்தல் முறைமை மறுசீரமைக்கப்பட வேண்டும் என்பதற்காக தேர்தலையே நடத்தாமல் இருப்பது எந்த காலத்திலும்...

download 2026 01 20T171116.980
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அபிவிருத்தியில் பாகுபாடு: மன்னார் பிரதேச சபையிலிருந்து 6 உறுப்பினர்கள் வெளிநடப்பு!

மன்னார் பிரதேச சபையின் 8 ஆவது அமர்வு நேற்றுமுன்தினம் (19) இடம் பெற்ற போது இலங்கைத்...

26 696e81aa1ff67
செய்திகள்இலங்கைபிராந்தியம்

திருகோணமலை சிலை விவகாரம்: சிறையிலுள்ள சக பிக்குகளை கஸ்ஸப தேரர் அச்சுறுத்துவதாகத் தகவல்!

திருகோணமலை கடற்கரைப் பகுதியில் சட்டவிரோதமாகப் புத்தர் சிலையை நிறுவிய விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள பலாங்கொடை கஸ்ஸப...