istockphoto 537971779 612x612 1
செய்திகள்இலங்கை

நீதிபதிகளுக்கு உடனடி இடமாற்றம்!

Share

நாடளாவிய ரீதியில் 118 நீதிபதிகளுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

உடன் அமுலுக்கு வரும் வகையில் குறித்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது என நீதிச்சேவை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

எதிர்வரும் ஏப்ரல் 4 ஆம் திகதி முதல் இடம்மாற்றம் வழங்கப்பட்டுள்ள குறித்த 118 நீதிபதிகளுக்கும் நீதிச்சேவை ஆணைக்குழுவின்செயலாளர் சன்ஜீவ சோமரத்தினவினால் உத்தியோகபூர்வகமாக கடிதம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

வடக்கு கிழக்கில் பணியாற்றும் நீதிபதிகளுக்கும் குறித்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதன்படி,

மல்லாகம் நீதிமன்றில் கடமையாற்றும் ஏ.ஜீ. அலெக்ஸ்ராஜா பருத்தித்துறை மாவட்ட நீதிவான் நீதிமன்றிற்கும்

மல்லாகம் நீதிவான் நீதிமன்ற மேலதிக நீதிவானாக கடமையாற்றிய ஆனந்தராஜா யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றிற்கும்

மட்டக்களப்பு மாவட்ட நீதிவானாக கடமையாற்றும் ரீ.கருணாகரன் வாழைச்சேனை மாவட்ட நீதிவான் நீதிமன்றிற்கும்

மன்னார் மாவட்ட நீதிவான் பீ.சிவகுமார் மல்லாகம் மாவட்ட நீதிவான் நீதிமன்றிற்கும்

மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிவான் ஏ.சீ.றிஸ்வான் பொத்துவில் மாவட்ட நீதிவான் நீதிமன்றிற்கும்

வாழைச்சேணை மாவட்ட நீதிபதி எம்.எம் பசீல் மட்டக்களப்பு மாவட்ட நீதிவான் நீதிமன்றிற்கும்

பருத்தித்துறை மாவட்ட நீதிபதி ஜீ.சைலயன் மல்லாகம் மாவட்ட நீதிவான் நீதிமன்றிற்கு மேலதிக நீதிவானாகவும்

யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்ற நீதிவான் ஏ.பீற்றர் போல் மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றிற்கும்

பொத்துவில் மாவட்ட நீதிபதி எம்.எச்.எம்.றவி கண்டி நீதிவான் நீதிமன்ற மேலதிக நீதிவானாகவும்

இடமாற்றம் பெற்று செல்லவுள்ளனர் என நீதிச்சேவை ஆணைக்குழுவின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 146
உலகம்செய்திகள்

இயேசு கிறிஸ்துவாகத் தன்னைச் சித்தரித்த டொனால்ட் டிரம்ப்: அமெரிக்காவில் வெடித்தது புதிய சர்ச்சை!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், தன்னை இயேசு கிறிஸ்துவுக்கு நிகராகச் சித்தரிக்கும் வகையில் செயற்கை நுண்ணறிவு...

world 145
செய்திகள்இலங்கைபிராந்தியம்

 4 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை: பொதுமக்களுக்கு NBRO அவசர அறிவுறுத்தல்!

நாட்டில் நிலவும் கடும் மழைப்பொழிவு காரணமாக, நான்கு மாவட்டங்களுக்கு முதலாம் கட்ட (Level-1) மண்சரிவு அபாய...

world 144
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கதிர்காம தேவாலயத்தின் இரு பிரதான பூசைகள் ரத்து: நாளை இரவு சித்திரைத் திருவிழா ஊர்வலம் ஆரம்பம்!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நிலவும் புண்ணிய காலத்தைக் கருத்திற்கொண்டு, வரலாற்றுச் சிறப்புமிக்க ருஹுணு...

world 143
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பொலன்னறுவை போதனா வைத்தியசாலையில் பரபரப்பு: கழிவுநீர் தொட்டியில் இருந்து சிசுவின் சடலம் மீட்பு!

பொலன்னறுவை போதனா வைத்தியசாலையின் கழிவுநீர் சுத்திகரிப்புத் தொட்டியொன்றிலிருந்து இன்று (ஏப்ரல் 13) சிசு ஒன்றின் சடலம்...