nisha
செய்திகள்உலகம்

நான் உயிரோடு தான் உள்ளேன் -மல்யுத்த வீராங்கனை நிஷா தாஹியா

Share

நான் உயிரோடு தான் உள்ளேன் என மல்யுத்த வீராங்கனை நிஷா தாஹியா காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்திய இளம் மல்யுத்த வீராங்கனை நிஷா தாஹியா மற்றும் அவரது சகோதரர் அடையாளம் தெரியாத கொலையாளிகளால் சுட்டுக் கொல்லப்பட்டதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வந்த நிலையில்,  அது போலியான செய்தி என்றும், தான் உயிரோடு இருப்பதாகவும் காணொளி ஒன்றை நிஷா தாஹியா வெளியிட்டுள்ளார்.

“நான் நலமாக இருக்கிறேன். தற்போது தேசிய சீனியர் போட்டியில் விளையாடுவதற்காக கோண்டா (GONDA) நகருக்கு வந்துள்ளேன்.

நான் கொல்லப்பட்டதாக வரும் செய்தி போலியானது” என அவர் அந்த காணொளியில் தெரிவித்துள்ளார்.

இதனை இந்தியா மல்யுத்த கூட்டமைப்பு வெளியிட்டுள்ளது.

கடந்த வெள்ளி அன்று செர்பியாவில் நடைபெற 23 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் 72 கிலோ எடைப்பிரிவில் வெண்கலம் வென்றிருந்தார் அவர் முன்னதாக அவர் சோனிபட் பகுதியில் அமைந்துள்ள சுஷில் குமார் மல்யுத்த அகாடமியில் பயிற்சியை முடித்து கொண்டு வீடு திரும்பும் போது சுட்டுக் கொல்லப்பட்டார் என போலி செய்தி பரவி இருந்தது.

இச்செய்தியால் இந்திய மக்கள் பலரும் துயரத்தில் மூழ்கிய நேரத்தில் நிஷா தாஹியா வெளியிடட காணொளியால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

#india

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 68f5c4968ea01
செய்திகள்இலங்கை

வெள்ள அபாய எச்சரிக்கை: பல வான்கதவுகள் திறப்பு!

மஹா ஓயா மற்றும் தெதுரு ஓயா படுகைப் பகுதிகளில் பெய்து வரும் பலத்த மழையைக் கருத்தில்...

image 95f229676a
செய்திகள்உலகம்

கரீபியன் கடலில் போதைப்பொருள் கடத்தல் முறியடிப்பு: அமெரிக்கப் படைகள் நீர்மூழ்கிக் கப்பலைத் தகர்த்தன!

லத்தீன் அமெரிக்க நாடுகளில் இருந்து கரீபியன் கடல் வழியாக அமெரிக்காவிற்கு அதிவிரைவு படகுகள் மூலம் போதைப்...

1752485228 GovyPay 6
செய்திகள்இலங்கை

போக்குவரத்து அபராதங்களை GovPay மூலம் செலுத்தலாம்: இலங்கை பொலிஸ் அறிவிப்பு

இலங்கைப் பொலிஸ் இன்று (அக்டோபர் 20) அறிவித்துள்ளதன் படி, தென் மாகாணத்தில் உள்ள வாகன ஓட்டுநர்கள்,...

image 7efc8d34a7
செய்திகள்இலங்கை

வவுனியாவில் பாரிய போதைப்பொருள் கைப்பற்றல்: 3.59 லட்சம் மாத்திரைகளுடன் இளைஞர் கைது!

வவுனியாவில், போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில், மூன்று லட்சத்து 59 ஆயிரம் போதை மாத்திரைகளுடன்...