VideoCapture 20211221 163642
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சட்ட விரோத படகுகள் அரசுடமையாக்கப்படும் – டக்ளஸ் தேவானந்தா

Share

சட்ட விரோதமாக எல்லை தாண்டும் இந்திய மீன்பிடி படகுகள் அரசுடமையாக்கப்பட வேண்டும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் மயிலிட்டித் துறைமுகத்திற்கான விஜயத்தின் போதே அவர் இதனை தெரிவித்தார்.

இது தொடர்பாக மேலும் கருத்து தெரிவித்த அவர்,

அரசுடமையாக்கப்பட்ட படகுகள் பிரதேச கடற்றொழில் சங்கங்களிடம் கையளிக்கப்பட்டு அவை மீனவர்களின் பாவனைக்காக பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்.

பயன்பாட்டுக்கு உதவாத படகுகள் விற்பனை செய்யப்பட்டு இந்தியக் கடற்றொழில் படகுகளினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்ட ஈட்டினை வழங்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அத்தோடு மயிலிட்டித் துறைமுகத்தின் முதலாம் கட்ட அபிவிருத்தி பணிகள் வேறு காரணங்களுக்காக முன்னெடுக்கப்பட்டமையால் சரியாக திட்டமிடப்படாமல் மீனவர்களுக்கு பிரயோசனமற்று சென்றுள்ளது.

ஆனால் விரைவில் ஆரம்பமாகவுள்ள இரண்டாம் கட்ட அபிவிருத்தி பணிகள் சிறப்பாக மேற்கொள்வதற்கு பிரதேச மீனவர்களின் கருத்துக்களும் உள்வாங்கப்பட்டே இறுதி தீர்மானம் எட்டப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

 

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
gold price growth
இலங்கை

இன்றைய நாளில் உயர்வினை பதிவு செய்த தங்கத்தின் விலை.

இலங்கையில் தங்கத்தின் விலை இன்று அதிகரிப்பை பதிவு செய்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம்...

sajith premadasa
இலங்கை

எதிர்க்கட்சித் தலைவர் கொண்டுவந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானம்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள், இன்று பாராளுமன்றத்தில் வைத்து நம்பிக்கையில்லாத்...

Suresh Salley
இலங்கை

மீண்டும் விசாரணைக்கு வந்த சுரேஷ் சலே வழக்கு.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளுக்காக , பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது...

body
இலங்கை

இரத்தினபுரியில் மீட்கப்பட்ட இளம்பெண்ணின் சடலம்!

  இரத்தினபுரி , கொடிகமுவவில் பகுதியில் தனியாக வசித்து வந்த 32 வயதான கமகே நிசான்ச...