watermark 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ் இந்து ஆலய விக்கிரகங்கள் கொழும்பு பகுதியில் மீட்பு!

Share

கடந்த 9 ஆம் திகதி தொடக்கம் யாழ்ப்பாணத்தில் பல இந்து ஆலய விக்கிரகங்கள் காணாமல் போயுள்ளன. குறித்த சம்பவத்தில் தொடர்புடையதாக கருதப்படும் இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காணாமல் போன விக்கிரகங்கள் காங்கேசன்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இராணுவ மற்றும் கடற்படையினரின் பாதுகாப்பில் இருந்த இந்து ஆலயங்களில் இருந்து திருடப்பட்டுள்ளன. திருடப்பட்ட பல விக்கிரகங்கள் கொழும்பு பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

குறித்த விக்கிரகங்கள் திருட்டு தொடர்பில் ஆராய்வதற்கு விசேட பொலிஸ் குழுவொன்று நியமிக்கப்பட்டு தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதை அடுத்து விக்கிரகங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நபர்கள் காங்கேசன்துறை நல்லிணக்கபுரம் மற்றும் நவக்கிரி பகுதிகளை சேர்ந்தவர்கள் என்பதோடு, குறித்த நபர்களின் தொலைபேசிகளில் காணாமல் போயுள்ள விக்கிரகங்களின் புகைப்படங்கள் காணப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்றையதினம் காணாமல் போயுள்ள 2 விக்கிரகங்கள் மீட்கப்பட்டுள்ளன. அத்தோடு 20 இற்கு மேற்பட்ட விக்கிரகங்கள் சம்பவ இடத்தில் மீட்கப்பட்டுள்ளதோடு, கொள்வனவு செய்த வர்த்தகர்கள் தலைமறைவாகி உள்ளனர்.

மீட்கப்பட்ட விக்கிரகங்கள் யாழ்ப்பாணத்திற்கு எடுத்துவரப்படவுள்ளன.

 

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
articles2FY0GVgzTw5z9g03mi2iHS
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பொலன்னறுவையில் கொடூரம்: கோடரித் தாக்குதலுக்குள்ளான 17 வயதுச் சிறுமி உயிரிழப்பு!

பொலன்னறுவை மாவட்டம் தம்பால பகுதியில் பக்கத்து வீட்டு இளைஞனால் கோடரியால் தாக்கப்பட்ட 17 வயதுடைய பாடசாலை...

26 6982fe7a72190
செய்திகள்உலகம்

எப்ஸ்டீன் விவகாரம்: பிரித்தானிய பிரபுக்கள் சபையிலிருந்து பீட்டர் மெண்டல்சன் அதிரடி விலகல்!

  பிரித்தானியாவின் முன்னாள் அமைச்சரும், அமெரிக்காவிற்கான முன்னாள் தூதருமான பீட்டர் மெண்டல்சன் (Peter Mandelson) மீது...

english lokshahi 2026 02 04 1vn53foh Mumbai
செய்திகள்இந்தியா

மும்பை விமான நிலையத்தில் நடுக்கம்: இரண்டு ஏர்பஸ் விமானங்கள் மோதி விபத்து!

இந்தியாவின் மிக முக்கியமான விமான நிலையங்களில் ஒன்றான மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான...

image 26ca8f03e9
செய்திகள்அரசியல்இலங்கை

இந்த அரசாங்கம் மேல்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்தது அல்ல – நம்பிக்கையூட்டும் வாசுதேவ நாணயக்கார!

தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகள் மற்றும் அதன் பின்னணி குறித்து முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார நேற்று...