gotabaya rajapaksa
செய்திகள்அரசியல்இலங்கை

அரச தலைவர் என்ற தகுதி எனக்கு இல்லை: பகிரங்கமாகக் கூறினாரா கோட்டா?

Share

அரச தலைவர் பதவியினை வகிப்பதற்குரிய தகைமை தன்னிடம் இல்லையென்பதை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ ஏற்றுக்கொண்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

ஹட்டனில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்.

கோட்டாபய ராஜபக்ஸவிற்கு மஹிந்த ராஜபக்ஷவின் சகோதாரராக இருப்பதற்கே தகுதியுள்ளதெனக் கூறியுள்ளார். “குடும்ப ஆட்சி எங்கும் உள்ளது. ஆனால், மக்கள் தான் அரசியலுக்கு தகுதியானவர்களை தெரிவு செய்வதில்லை.

இதனைப் படித்த இளைஞர்களால் தான் மாற்றியமைக்க முடியும். இதற்காக கட்சி பேதங்களைத் துறந்து அனைவரும் ஒன்றிணைய வேண்டும். மக்களுக்குச் சேவை செய்ய முடியாது போகின்ற அரசியல்வாதிகள், பதவியினைத் துறக்கும் நிலையானது இலங்கையில் உருவாக வேண்டும்.

இல்லை என்றால் நாடு இன்னும் பாதாளத்தை நோக்கியே செல்லும்” என எச்சரித்துள்ளார்.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
07 5
செய்திகள்இலங்கை

மத்திய கிழக்கு வான்பரப்பு மூடல்: ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் 12 விமான சேவைகளை ரத்து செய்தது!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் போர்ப் பதற்றம் மற்றும் வான்பரப்பு மூடப்பட்டிருப்பதன் காரணமாக, ஸ்ரீலங்கன்...

06 4
செய்திகள்உலகம்

ஈரான் எல்லையில் அதிரடி: ஊடுருவல் முயற்சியைத் தடுத்ததாக IRGC அறிவிப்பு!

ஈரானின் மேற்கு எல்லைப் பகுதியினூடாக ஊடுருவித் தாக்குதல்களை நடத்தத் திட்டமிட்டிருந்த பிரிவினைவாதக் குழுக்கள் மீது, ஈரான்...

05 4
செய்திகள்உலகம்

மத்திய கிழக்கு பதற்றம்: அவுஸ்திரேலியா தனது இராணுவ விமானங்களை அனுப்பி வைத்தது!

மத்திய கிழக்கில் ஈரான் மற்றும் அமெரிக்கா-இஸ்ரேல் படைகளுக்கு இடையே போர் தீவிரமடைந்துள்ள நிலையில், அவுஸ்திரேலியா தனது...

04 4
செய்திகள்இலங்கை

உணவுப் பொதிகளில் கடத்தப்பட்ட 53.6 கோடி போதைப்பொருள்: மலேசியாவிலிருந்து வந்த பார்சல்கள் சிக்கின!

மலேசியாவிலிருந்து இலங்கைக்கு உணவுப் பொதிகள் என்ற பெயரில் கடத்தப்பட்ட சுமார் 536 மில்லியன் ரூபா (53.6...