CEB
செய்திகள்அரசியல்இலங்கை

கெரவலப்பிட்டிய மின் உற்பத்தி நிலையம் மூலம் இத்தனை பில்லியன் இலாபமா?

Share

கெரவலப்பிட்டிய மின் உற்பத்தி நிலையத்தின் 40 வீத பங்கை அமெரிக்க நிறுவனத்துக்கு வழங்குவதன் மூலம், நாட்டுக்கு 110 பில்லியன் ரூபா லாபம் கிடைக்கின்றது.

அத்துடன் எதிர்வரும் ஒன்றரை வருடத்தில் இந்த வேலைத்திட்டத்தை ஆரம்பிக்க இருக்கின்றோம் என இலங்கை மின்சார சபை பொது முகாமையாளர் பொறியியலாளர் எம்.ஆர்.ரணதுங்க தெரிவித்தார்.

கெரவலப்பிட்டிய யுகதனவிய மின்உற்பத்தி நிலையத்தின் முதலீட்டு வேலைத்திட்டத்தின் நன்மை தீமை தொடர்பான கலந்துரையாடல் நேற்று தேசிய அபிவிருத்திக்கான ஊடக மையத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

‘திரவ இயற்கை வாயு மூலம் மின்சாரத்தை பெற்றுக்கொள்ளவே கெரவலப்பிடிய யுகதனவிய 2010இல் அமைக்கப்பட்டது.

10வருடமாகியும் அதனை எங்களால் முன்னெடுக்க முடியாமல் போனது.

கெரவலப்பிடியவில் இருந்து 5 வீதம் வரையான மின்சாரமே பெறப்படுகின்றது. அத்துடன் அரசாங்கத்தின் இலக்காக இருப்பது 2030 வருடமாகும்போது நாட்டுக்கு தேவையான மின் உற்பத்தியில் 70வீதம் மீள் புத்தாக்க சக்தி ஊடாக பெறவேண்டும் என்பதாகும்.

அதன் பிரகாரம் திரவ இயற்கை வாயு மூலம் மின்சாரத்தை பெற்றுக்கொள்ளும் நோக்கில் கெரவலப்பிடிய யுகதனவிய மின்உற்பத்தி நிலையத்தின் 40வீத பங்கை அமெரிக்க நிறுவனம் ஒன்றுக்கு வழங்குவதற்கு இணக்கப்பாட்டுக்கு வந்திருக்கின்றாறோம்.

என்றாலும் ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவில்லை. இது இரகசியமாக மேற்கொள்ளப்படுவதொன்று அல்ல.

இதற்கு அமைச்சரவையினால் 4 தடவைகள் அனுமதி கிடைக்கப்பெற்றிருக்கின்றது. அத்துடன் 250 டொலர் மில்லியனுக்கு 40 வீத பங்கு வழங்கப்படுகின்றது.

இதனால் நாட்டுக்கு நன்மையாகும். அரசாங்கமும் குறித்த அமெரிக்க நிறுவனமும் இணைந்தே இந்த இணக்கப்பாட்டுக்கு வந்திருக்கின்றது.

கெரவலப்பிடியவில் இருக்கும் யுகதனவிய மற்றும் சுபதனவிய ஆகிய இரண்டு மின் உற்பத்தி நிலையங்களின் மூலம் மொத்தமாக நாட்டுக்கு 110 பில்லியன் ரூபா லாபம் கிடைக்கின்றது எனக் குறிப்பிட்டுள்ளார்.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...