202201131439389644 1 Boris Johnson1. L styvpf
செய்திகள்உலகம்

கட்டுப்பாடுகளை மீறி விருந்துபசாரம்! – மன்னிப்பு கோரிய பிரதமர்

Share

இங்கிலாந்து பிரதமர் போரீஸ் ஜான்சன் விருந்து நிகழ்வொன்றில் கலந்துகொண்டுள்ள நிலையில், தற்போது அது சர்ச்சையில் முடிந்துள்ளது.

கடந்த 2020 – மே மாதம் இங்கிலாந்தில் கொரோனா தாக்கம் அதிகரித்த நிலையில், அங்கு ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டன.

இந்த நிலையில், குறித்த காலப்பகுதியில் இங்கிலாந்து பிரதமர் தனது அலுவலக வெளிப்பகுதியில் இடம்பெற்ற விருந்துபசார நிகழ்வில் கலந்துகொண்டமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவத்தால் அவரது கட்சியான கன்சர்வேடிவ் கட்சி உட்பட இங்கிலாந்தின் எதிர்க்கட்சிகளும் அவரை கடும் விமர்சனம் செய்தன. இந்நிலையில், பிரதமர் போரீஸ் ஜான்சன் இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றினார்.

கட்டுப்பாடுகள் மற்றும் விதிமுறைகளை மீறி விருந்துபசார நிகழ்வில் கலந்துகொண்டமை தவறே. இதற்காக நான் மன்னிப்பு கோருகிறேன் – என அவர் தனது உரையில் தெரிவித்துள்ளார்.

இருப்பினும் அவரது மன்னிப்பை ஏற்றுக்கொள்ளாத எதிர்க்கட்சித் தலைவர் கெய்ர் ஸ்டார்மர், பிரதமர் பதவியில் இருந்து போரீஸ் ஜான்சன் விலக வேண்டும் என்று வலியுறுத்தினார்.

#World

 

 

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
image 1200x800 19 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வங்கக்கடலில் குறைந்த அழுத்தப் பிரதேசம் நீடிப்பு: மீனவர்களுக்கு ஆம்பர் எச்சரிக்கை! – வளிமண்டலவியல் திணைக்களம்!

இலங்கைக்குத் தென்கிழக்காக, தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் நிலவிய குறைந்த அழுத்தப் பிரதேசம் (Low Pressure...

image 1200x800 18 2
விளையாட்டுசெய்திகள்

இலங்கை அணிக்கு பேரிடி! – மதீஷ பத்திரண உலகக்கோப்பையிலிருந்து விலகல்; மதுசங்கவுக்கு ஐசிசி அனுமதி!

ஐசிசி டி20 உலகக்கோப்பை 2026 தொடரில் விளையாடி வரும் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து...

image 1200x800 17 3
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

அக்குரேகொட இரட்டைக் கொலை: கைதான சகோதரர்களுக்கு மார்ச் 4 வரை விளக்கமறியல்! – டுபாயிலிருந்து இயங்கிய மாபியா அம்பலம்!

அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி ஒருவரையும் அவரது மனைவியையும் சுட்டுக்கொலை செய்த சம்பவத்திற்கு உதவி ஒத்தாசை வழங்கிய...

image 1200x800 20 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஹம்பாந்தோட்டையில் இரு பேருந்துகள் பயங்கர மோதல்! – வெளிநாட்டினர் உட்பட 20 பேர் காயம்; கடைகள் சேதம்!

ஹம்பாந்தோட்டை பல்லேமளல பகுதியில் இன்று (18) நண்பகல் இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்தும், தனியார் பேருந்தும்...