20211103 145216 scaled
செய்திகள்இலங்கைபிராந்தியம்

முன்னாள் போராளிக்கு வீடு

Share
புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளி ஒருவருக்கு இன்றைய தினம் மயிலிட்டியில் புதிய வீடு ஒன்றுக்கான அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது.
யாழ் மாவட்டத்திற்கு இன்றைய தினம் வருகை தந்த பாதுகாப்பு பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வாவினால் இந்த வீட்டிற்கான அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது.
இவர் அண்மையிலேயே ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் அடிப்படையில் விடுதலை
செய்யப்பட்டிருந்தார். இவரது பெற்றோர் உயிரிழந்துள்ளதுடன் இவர் தற்போது சகோதரியுடன் வசித்து வருகின்ற நிலையில் இராணுவத்தினரிடம் உதவியினை கோரியநிலையில் இந்த வீட்டுக்கான அடிக்கல் நாட்டப்பட்டது.
அதேவேளை குறைந்த வருமானத்தைப் பெறுகின்ற குடும்பம் ஒன்றுக்காக உடுவில் பகுதியில் இராணுவத்தினரால் கட்டப்பட்ட புதிய இல்லம் ஒன்றும் பயனாளிகளிடம் இராணுவத் தளபதியினால் கையளிக்கப்பட்டது.
 இந்நிகழ்வில் யாழ் மாவட்ட பாதுகாப்புப் படை கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் கொடிதுவக்கு உட்பட இராணுவ அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
20
இலங்கைசெய்திகள்

இந்திய பாதுகாப்பு ஒப்பந்தத்தை இரகசியமாக கையாளும் அரசாங்கம்!

இந்தியப் பிரதமரின் இலங்கை விஜயத்தின் போது கையெழுத்திடப்பட்ட பாதுகாப்பு ஒப்பந்தத்தை பொதுமக்களுக்கு வெளியிட முடியாது என்று...

19
இலங்கைசெய்திகள்

மனிதர்களும் யானைகளும் ஒன்றாக வாழும் நிலப்பரம்பல் : அதிர்ச்சிக்குள்ளாக்கும் ஆய்வுகள்

இலங்கையில் 44 வீத நிலப்பரப்பில் மனிதர்களும் யானைகளும் ஒன்றாக வசிப்பதாக ஆய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த...

18
இலங்கைசெய்திகள்

திருகோணமலை கடற்படை தள நிலத்தடி சிறைகள் : முன்னாள் கடற்படைத் தளபதியின் அதிர்ச்சி வாக்குமூலம்

திருகோணமலை கடற்படை தள நிலத்தடி சிறைகளில் தனிநபர்களை சட்டவிரோதமாக தடுத்து வைத்திருந்தமை தொடர்பாக குற்றப் புலனாய்வுத்...

16
இலங்கைசெய்திகள்

அரசியல்வாதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள எச்சரிக்கை கடிதங்கள்

25 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் 100 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எச்சரிக்கை கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன....