011 1 750x375 1
செய்திகள்இலங்கை

அச்சுவேலி பகுதியில் வீடு புகுந்து தாக்குதல்! – பொலிஸார் அசமந்தம்

Share

அச்சுவேலி பகுதியில் வீடு புகுந்து தாக்குதல்! – பொலிஸார் அசமந்தம்

யாழ்ப்பாணம் – அச்சுவேலி பகுதியில் வன்முறை கும்பல் ஒன்றின் தாக்குதலுக்கு உள்ளாகிய குடும்பமொன்று இது தொடர்பில் பொலிஸ் நிலையத்துக்கு தெரிவித்தும் பொலிஸார் நடவடிக்கை எடுக்கவில்லை என்று யாழ். மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபரிடம் முறையிட்டுள்ளது.

யாழ்ப்பாணம் அச்சுவேலி மேற்கு ஜோன்ராஜா வீதியில் கைக்குழந்தையுடன் வசிக்கும் இளம் தம்பதியினர் வீட்டில் நேற்றுமுன்தினம் (14) இரவு 11 மணியளவில் கூறிய ஆயுதங்களுடன் வந்த மூவர் அடங்கிய கும்பல் வீட்டினுள் புகுந்து தாக்குதல் மேற்கொண்டுள்ளது.

வீட்டின், யன்னல் கண்ணாடிகள், கதவுகள், கேட் என்பவற்றை தாக்கி அவற்றை சேதப்படுத்தியதோடு குறித்த தம்பதியினரையும் அச்சுறுத்திச் சென்றுள்ளனர்.

இத் தாக்குதலால் சுமார் 1 லட்சம் ரூபா பெறுமதியான பொருள்கள் சேதமாகியுள்ளன

இந்த நிலையில்,குறித்த விடயம் தொடர்பாக அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் பாதிக்கப்பட்டவர்கள் முறையிட்டுள்ளனர்.எனினும் நேற்று காலை 10 மணி வரை பொலிஸார் சம்பவ இடத்துக்கு வருகை தரவில்லை.

இந்நிலையில் யாழ்.மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபரிடம் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் முறைப்பாடு செய்துள்ளனர்.

011 2 600x288 1

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
images 8
செய்திகள்இலங்கை

யாழ். செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு ஒத்திவைப்பு: மழை காரணமாக அடுத்த ஆண்டு ஜனவரி 19-இல் மீண்டும் ஆராய முடிவு!

யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் குறித்துத் தீர்மானம் ஒன்று எடுக்கப்பட்டுள்ளது....

25 6906ded777bf4
செய்திகள்இலங்கை

நான்கு முன்னணி ஒப்பந்ததாரர்களுக்கு அரச ஒப்பந்தங்களில் பங்கேற்கத் தடை: மத்திய அதிவேக வீதி ஒப்பந்தத்தில் தவறான தகவல் அளித்ததே காரணம்!

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகத்தால் (Ministry of Transport, Highways and Urban...

image d1460108ca
இலங்கைசெய்திகள்

உயிர் அச்சத்துடன் பயணிக்கும் மக்கள்: ஒட்டுசுட்டான் பனிக்கன்குளத்தில் தொடருந்து கடவை அமைக்கக் கோரிக்கை!

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம் கிராம அலுவலர் பிரிவில், தொடருந்து கடவை...

25 690859776f0a2
செய்திகள்இலங்கை

காவல்துறைக் காவலில் இருந்த சந்தேகநபர் உயிரிழப்பு: கந்தேகெட்டிய சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகள்!

நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட இரண்டு பிடியாணைகளின் பேரில் கைது செய்யப்பட்ட 46 வயதுடைய சந்தேக நபர் ஒருவர்,...