011 1 750x375 1
செய்திகள்இலங்கை

அச்சுவேலி பகுதியில் வீடு புகுந்து தாக்குதல்! – பொலிஸார் அசமந்தம்

Share

அச்சுவேலி பகுதியில் வீடு புகுந்து தாக்குதல்! – பொலிஸார் அசமந்தம்

யாழ்ப்பாணம் – அச்சுவேலி பகுதியில் வன்முறை கும்பல் ஒன்றின் தாக்குதலுக்கு உள்ளாகிய குடும்பமொன்று இது தொடர்பில் பொலிஸ் நிலையத்துக்கு தெரிவித்தும் பொலிஸார் நடவடிக்கை எடுக்கவில்லை என்று யாழ். மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபரிடம் முறையிட்டுள்ளது.

யாழ்ப்பாணம் அச்சுவேலி மேற்கு ஜோன்ராஜா வீதியில் கைக்குழந்தையுடன் வசிக்கும் இளம் தம்பதியினர் வீட்டில் நேற்றுமுன்தினம் (14) இரவு 11 மணியளவில் கூறிய ஆயுதங்களுடன் வந்த மூவர் அடங்கிய கும்பல் வீட்டினுள் புகுந்து தாக்குதல் மேற்கொண்டுள்ளது.

வீட்டின், யன்னல் கண்ணாடிகள், கதவுகள், கேட் என்பவற்றை தாக்கி அவற்றை சேதப்படுத்தியதோடு குறித்த தம்பதியினரையும் அச்சுறுத்திச் சென்றுள்ளனர்.

இத் தாக்குதலால் சுமார் 1 லட்சம் ரூபா பெறுமதியான பொருள்கள் சேதமாகியுள்ளன

இந்த நிலையில்,குறித்த விடயம் தொடர்பாக அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் பாதிக்கப்பட்டவர்கள் முறையிட்டுள்ளனர்.எனினும் நேற்று காலை 10 மணி வரை பொலிஸார் சம்பவ இடத்துக்கு வருகை தரவில்லை.

இந்நிலையில் யாழ்.மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபரிடம் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் முறைப்பாடு செய்துள்ளனர்.

011 2 600x288 1

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
13 11
உலகம்செய்திகள்

போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கு பின்னர் காஷ்மீரில் தாக்குதல்.. பாகிஸ்தான் மறுப்பு தெரிவிப்பு

இந்தியாவுடனான போர் நிறுத்த ஒப்பந்தத்தை பாகிஸ்தான் மீறியதாக இந்தியா கூறியதை பாகிஸ்தான் அரசாங்கத்தின் உயர் அதிகாரி...

15 11
இலங்கைசெய்திகள்

வாக்களிப்பதைத் தவிர்த்து கொழும்பில் தங்கியிருந்த 10 லட்சம் வாக்காளர்கள்

கடந்த உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலின் போது வேறுபிரதேசங்களைச் சேர்ந்த சுமார் பத்து லட்சம் வாக்காளர்கள், வாக்களிப்பதைத்...

16 11
இலங்கைசெய்திகள்

இலங்கையை உலுக்கிய பயங்கர விபத்து – பலி எண்ணிக்கை 21ஆக அதிகரிப்பு

றம்பொட பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21ஆக அதிகரித்துள்ளதாக போக்குவரத்து பிரதியமைச்சர் ஊடகம்...

14 11
இலங்கைசெய்திகள்

மின்சாரக் கட்டணம் அதிகரிப்பு தொடர்பில் மின்சார சபையின் அறிவிப்பு

மின்சார கட்டணங்களை உயர்த்துவதற்கான முன்மொழிவை இலங்கை மின்சார சபை அடுத்த வாரம் பொதுப் பயன்பாட்டு ஆணையத்திடம்...