e14ace8d 757b 40df b664 51122f0ce533
செய்திகள்அரசியல்இலங்கை

வரலாற்று ரீதியாக புறக்கணிக்கப்படும் மலையக மக்கள்!!

Share

இலங்கையின் வாழ் மலையக தமிழ்த் தொழிலாளர்கள்,  நாட்டுக்கு விலையுயர்ந்த அந்நியச் செலாவணியைப் பெற்றுத் தருகின்றபோதும், அவர்கள் “மனிதாபிமானமற்ற மற்றும் அவமதிக்கப்படும்” சூழ்நிலையில் வாழ்கின்றனர் என்று ஐக்கிய நாடுகளின் நிபுணர் ஒருவர் கூறியுள்ளார் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சமகால அடிமைத்தனம் தொடர்பான ஐ.நா.வின் சிறப்பு அறிக்கையாளர் டொமோயா ஒபோகாடா “தற்கால அடிமைத்தன வடிவங்கள் இனப் பரிமாணத்தைக் கொண்டுள்ளன. குறிப்பாக, 200 ஆண்டுகளுக்கு முன்னர் தோட்டத் துறையில் பணியாற்றுவதற்காக இந்தியாவிலிருந்து அழைத்து வரப்பட்ட மலையக தமிழர்கள் – அவர்களின் தோற்றத்தின் அடிப்படையில் பல்வேறு வகையான பாகுபாடுகளை தொடர்ந்துஎதிர்கொள்கின்றனர்,” என தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்ததாவது, இலங்கையின் உள்நாட்டுப் போரின் போதும் அதற்குப் பின்னரும், போரினால் பாதிக்கப்பட்ட  தமிழர்கள் தொடர்பான மனித உரிமைகள் தொடர்பான கவலைகளை ஐ.நா அமைப்புக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

மலையகத்தின் அவல நிலை, வரலாற்று ரீதியாக புறக்கணிக்கப்பட்ட மற்றும் ஓரங்கட்டப்பட்ட தமிழ் சமூகம் சர்வதேச அளவில் ஒப்பீட்டளவில் குறைவான கவனத்தைப் பெற்றுள்ளது எனவும் அவரது அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 161
செய்திகள்இலங்கைபிராந்தியம்

விபத்துகளால் 713 பேர் பலி: வாகன ஓட்டுநர்களுக்கு பொலிஸார் கடும் எச்சரிக்கை!

தற்போது நிலவி வரும் பண்டிகைக் காலத்தில் மதுபோதையில் வாகனம் செலுத்துவதையும், கவனக்குறைவாகச் செயல்படுவதையும் தவிர்க்குமாறு இலங்கை...

world 160
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் நிகழ்ந்த விபத்துக்கள் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள்: பொலிஸாரின் அதிரடி சோதனைகள்!

இலங்கையின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில மணிநேரங்களில் இடம்பெற்ற விபத்துக்கள் மற்றும் பொலிஸ் சோதனைகளில் பலர்...

world 159
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பட்டாசு வெடிக்கும் போது அவதானம் செலுத்துமாறு சுகாதார அமைச்சு அறிவுறுத்தல்!

சித்திரைப் புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது எதிர்பாராத விதமாக இடம்பெறும் பட்டாசு விபத்துகளைத் தடுப்பது குறித்து சுகாதார...

world 158
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கல்கிசையில் மோதல்: இலங்கை பெண்ணைத் தாக்கிய உக்ரைன் பெண் விளக்கமறியலில்!

கல்கிசையில் அமைந்துள்ள உணவகம் ஒன்றிற்கு முன்பாக கடந்த 12ஆம் திகதி இரவு இடம்பெற்ற மோதல் சம்பவம்...