59955024 303
செய்திகள்உலகம்

புதிய வைரஸுக்கான பெயரில் “ஜி” எனும் எழுத்து நீக்கப்பட்டமைக்கான காரணம் இதோ!

Share

2021 நவம்பர் மாதம் 26ஆம் திகதி “ஜி” என்கிற கிரேக்க எழுத்தை கொண்டு புதிய வைரசுக்கு பெயர் சூட்டுவதற்கான ஆய்வு உலக சுகாதார அமைப்பு விஞ்ஞானிகளால் மேற்கொள்ளப்பட்டது. ஆனால், ஆய்விற்கு பின்னராக “ஜி” என்ற கிரேக்க எழுத்தை உலக சுகாதார நிறுவன விஞ்ஞானிகள் நிராகரித்து விட்டனர்.

பொதுவாக வைரஸ் ரகங்களுக்கு கிரேக்க எழுத்துக்களால் பெயர் சூட்டப்படுவது வழக்கம். குறிப்பாக கொரோனாவின் தீவிர ரகமான “டெல்டா” என்கிற பெயரும் கிரேக்க எழுத்துக்களில் இருந்தே தோற்றுவிக்கப்பட்டது.

அடுத்ததாக தற்போது புதிதாக தோன்றியிருக்கும் கொரோனா வைரசுக்கு பெயர் சூட்டுவதற்கான முயற்சி உலக சுகாதார அமைப்பினால் மேற்கொள்ளப்பட்டது.

முதலில் ‘நூ’ என இந்த புதிய ரகத்துக்கு பெயர் சூட்ட திட்டமிட்டனர். ஆனால் அந்த எழுத்து ஆங்கில வார்த்தையான “நியூ” என்ற வார்த்தையுடன் இணைவதால் குழப்பம் ஏற்பட்டு நிராகரிக்கப்பட்டது.

இதில் “நூ” என்ற எழுத்திற்கு ஆங்கிலத்தில் நிர்வாணம் என்ற பொருளும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதற்கு அடுத்ததாக “ஜி” என்கிற கிரேக்க எழுத்தை கொண்டு இப் புதிய வைரசுக்கான பெயர் சூட்ட பரிசீலிக்கப்பட்டது. ஆனால் அது சீன அதிபர் “ஜி ஜிங்பிங்” பெயரை குறிக்கும் வகையில் அமைந்துவிடக்கூடாது என உலக சுகாதார அமைப்பு விஞ்ஞானிகள் இந்த எழுத்தை தவிர்த்து விட்டனர்.

எனவே கிரேக்கத்தில் “ஜி” என்ற எழுத்திற்கு அடுத்ததாக வரும் எழுத்து பயன்படுத்தப்பட்டு ஓமிக்ரோன் என பெயர் சூட்டப்பட்டது.

இதனால் சமூக வலைத்தளங்கள் “ஜி” எனும் எழுத்தினை நிராகரித்தமையால் உலக சுகாதார அமைப்பினை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

#WorldNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
03 6
செய்திகள்இந்தியா

இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பு: ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்க அமெரிக்கா 30 நாட்கள் அனுமதி

மத்திய கிழக்கில் ஈரான் மற்றும் அமெரிக்கா-இஸ்ரேலிய படைகளுக்கு இடையே நிலவும் தீவிர போர்ச் சூழலால், சர்வதேச...

02 5
செய்திகள்உலகம்

ஈரானில் முழுமையான இணைய முடக்கம்: வான்வழித் தாக்குதல்களுக்கு மத்தியில் இருளில் தவிக்கும் மக்கள்

மத்திய கிழக்கில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் முன்னெடுத்து வரும் ‘ஆபரேஷன் எபிக் பியூரி’ (Operation Epic...

01 5
உலகம்செய்திகள்

ஈரான் பள்ளி மீதான வான்வழித் தாக்குதல்: உயிரிழப்புகள் குறித்து தீவிர விசாரணை

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர்ச் சூழலில், ஈரானின் மினாப் (Minab) பகுதியில் உள்ள பெண்கள்...

06 5
செய்திகள்உலகம்

மத்திய கிழக்கு போர்: வளைகுடா கடற்பரப்பில் 35,000 பேர் தவிப்பு – ஐ.நா எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கு இடையே வெடித்துள்ள போரினால் வளைகுடா பிராந்தியத்தில் கடுமையான...