59955024 303
செய்திகள்உலகம்

புதிய வைரஸுக்கான பெயரில் “ஜி” எனும் எழுத்து நீக்கப்பட்டமைக்கான காரணம் இதோ!

Share

2021 நவம்பர் மாதம் 26ஆம் திகதி “ஜி” என்கிற கிரேக்க எழுத்தை கொண்டு புதிய வைரசுக்கு பெயர் சூட்டுவதற்கான ஆய்வு உலக சுகாதார அமைப்பு விஞ்ஞானிகளால் மேற்கொள்ளப்பட்டது. ஆனால், ஆய்விற்கு பின்னராக “ஜி” என்ற கிரேக்க எழுத்தை உலக சுகாதார நிறுவன விஞ்ஞானிகள் நிராகரித்து விட்டனர்.

பொதுவாக வைரஸ் ரகங்களுக்கு கிரேக்க எழுத்துக்களால் பெயர் சூட்டப்படுவது வழக்கம். குறிப்பாக கொரோனாவின் தீவிர ரகமான “டெல்டா” என்கிற பெயரும் கிரேக்க எழுத்துக்களில் இருந்தே தோற்றுவிக்கப்பட்டது.

அடுத்ததாக தற்போது புதிதாக தோன்றியிருக்கும் கொரோனா வைரசுக்கு பெயர் சூட்டுவதற்கான முயற்சி உலக சுகாதார அமைப்பினால் மேற்கொள்ளப்பட்டது.

முதலில் ‘நூ’ என இந்த புதிய ரகத்துக்கு பெயர் சூட்ட திட்டமிட்டனர். ஆனால் அந்த எழுத்து ஆங்கில வார்த்தையான “நியூ” என்ற வார்த்தையுடன் இணைவதால் குழப்பம் ஏற்பட்டு நிராகரிக்கப்பட்டது.

இதில் “நூ” என்ற எழுத்திற்கு ஆங்கிலத்தில் நிர்வாணம் என்ற பொருளும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதற்கு அடுத்ததாக “ஜி” என்கிற கிரேக்க எழுத்தை கொண்டு இப் புதிய வைரசுக்கான பெயர் சூட்ட பரிசீலிக்கப்பட்டது. ஆனால் அது சீன அதிபர் “ஜி ஜிங்பிங்” பெயரை குறிக்கும் வகையில் அமைந்துவிடக்கூடாது என உலக சுகாதார அமைப்பு விஞ்ஞானிகள் இந்த எழுத்தை தவிர்த்து விட்டனர்.

எனவே கிரேக்கத்தில் “ஜி” என்ற எழுத்திற்கு அடுத்ததாக வரும் எழுத்து பயன்படுத்தப்பட்டு ஓமிக்ரோன் என பெயர் சூட்டப்பட்டது.

இதனால் சமூக வலைத்தளங்கள் “ஜி” எனும் எழுத்தினை நிராகரித்தமையால் உலக சுகாதார அமைப்பினை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

#WorldNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
19 4
செய்திகள்உலகம்

ஈரான் போர் பதற்றங்களுக்கு மத்தியில்: அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்காக வெள்ளை மாளிகையில் இடம்பெற்ற சிறப்புப் பிரார்த்தனை!

ஈரானுடனான மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அந்நாட்டின் பாதுகாப்புப்...

20 6
செய்திகள்உலகம்

பாபா வாங்காவின் உலகப்போர் கணிப்புடன் ஒத்துப் போகிறதா தற்போதைய ஈரான்-இஸ்ரேல் மோதல்? அச்சத்தில் உலக நாடுகள்!

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே தீவிரமடைந்துள்ள போர்ச் சூழல், புகழ்பெற்ற பல்கேரியத் தீர்க்கதரிசி பாபா வாங்கா...

21 6
செய்திகள்உலகம்

ஈரான் கப்பல் மற்றும் பணியாளர்களை மீட்ட இலங்கை: ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு!

இலங்கை கடற்பரப்பில் அண்மையில் தாக்குதலுக்கு உள்ளான ஈரானியக் கப்பல் மற்றும் அதில் இருந்த பணியாளர்களை மீட்பதற்காக...

24 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அஸ்வெசும பயனாளிகளின் தகவல்கள் புதுப்பிப்பு: மார்ச் 28 வரை கணக்கெடுப்பு பணிகள் தீவிரம்!

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் முதற்கட்டத்தின் கீழ் (2022/2023) விண்ணப்பித்த பயனாளிகள் மற்றும் நன்மைகளைப் பெறாத விண்ணப்பதாரர்கள்...