hari1
செய்திகள்உலகம்

கனடா எம்.பியாக ஹரி ஆனந்தசங்கரி! – மூன்றாவது தடவையும் பதவியேற்பு

Share

கனடா நாடாளுமன்ற உறுப்பினராக மூன்றாவது முறையாகவும் ஹரி ஆனந்தசங்கரி, தெரிவாகியுள்ளார்.

ஹரி ஆனந்தசங்கரி இலங்கையின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழர் விடுலைக் கூட்டணியின் தலைவருமான வி.ஆனந்தசங்கரியின் மகனாவார்.

இவர்அண்மையில் நடைபெற்ற கனடா நாடாளுமன்ற தேர்தலில் ரொரண்டோவின் – ஸ்கார்பரோ ரூஜ் பார்க் தொகுதியில் லிபரல் கட்சி சார்பில் போட்டியிட்டார்.

இவர் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட ஏனைய வேட்பாளர்களை விட பெரும்பான்மையான வாக்குகளை பெற்று வெற்றியைப் பதிவு செய்துள்ளார்.

இவர் 2011, 2019 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களிலும் போட்டியிட்டு சிறப்பான வெற்றியை பதிவு செய்திருந்தார்.

இந்நிலையில் நேற்றுமுன்தினம் (20.09.2021) நடைபெற்ற தேர்தலில் அவர் மீண்டும் மூன்றாவது தடவையாக வென்றுள்ளார்.

மூன்றாவது முறையாகவும் ஹரி ஆனந்தசங்கரி, கனடா நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவாகியுள்ளமை புலம்பெயர் தமிழ் சமூகத்தினரிடையே உற்சாகத்தைக் கொடுத்துள்ளது.

Scarborough—Rouge Park தொகுதியில் போட்டியிட்ட ஹரி ஆனந்தசங்கரி 20 ஆயிரத்து 889 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

21 61499473bd831 md

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
12 24
இலங்கைசெய்திகள்

மைத்திரி – ரணில் சந்திப்பு : பேச்சுவார்த்தையில் கிடைத்த வெற்றி

முன்னாள் ஜனாதிபதிகளான மைத்திரிபால சிறிசேன மற்றும் ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெற்றுள்ளது. கொழும்பு...

11 23
உலகம்செய்திகள்

இலங்கை ஏதிலிக்கு எதிராக இந்திய நீதிமன்றின் வார்த்தை பிரயோகம் : கண்டிக்கும் கம்யூனிஸ்ட் கட்சி

இலங்கை தமிழ் ஏதிலி ஓருவருக்கு எதிராக, இந்திய உயர் நீதிமன்றம் பயன்படுத்திய வார்த்தைகளை, இந்திய மார்க்சிஸ்ட்...

10 26
இலங்கைசெய்திகள்

இலங்கையில் திருத்தப்படவுள்ள முக்கிய அரச கட்டடங்கள்

இலங்கையின் மிகவும் முக்கியமான மூன்று அரச கட்டடங்களுக்கு, திருத்தப்பணிகள் அவசியம் என கண்டறியப்பட்டுள்ளது. ஸ்ரீ ஜெயவர்தனபுர...

8 26
இலங்கைசெய்திகள்

வடக்கு காணிகள் தொடர்பான வர்த்தமானி! தற்காலிக இடைநிறுத்தத்திற்கு சுமந்திரன் எதிர்ப்பு

வடக்கு மாகாணத்திலுள்ள காணிகள் தொடர்பான வர்த்தமானியை தற்காலிகமாக இடைநிறுத்தும் அரசாங்கத்தின் நடவடிக்கையானது ஒருபோதும்  நிரந்தர தீர்வை...