IMG 20211119 WA0024 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ். மாநகர சபைக்கு செங்கோல் கையளிப்பு

Share

யாழ்ப்பாணம் மாநகர சபைக்கு நல்லூர் கந்தசுவாமி தேவஸ்தானத்தினரால் நேற்றையதினம் செங்கோல் கையளிக்கப்பட்டது.

வரலாற்று புகழ்மிக்க நல்லூர் கந்தசுவாமி தேவஸ்தானத்தின் பத்தாவது நிர்வாக அதிகாரி குகஸ்ரீ குமாரதாஸ மாப்பாண முதலியாரின் நினைவாக இந்த செங்கோல் கையளிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் சிவபாதமடைந்த நல்லூர் கந்தசுவாமி தேவஸ்தானத்தின் பத்தாவது நிர்வாக அதிகாரி குகஸ்ரீ குமாரதாஸ மாப்பாண முதலியாரின் நினைவாக, நல்லூர் ஆலயம் மற்றும் யாழ்ப்பாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் முகமாக பிரதிஷ்டை செய்யப்பட்ட செங்கோலே யாழ்ப்பாணம் மாநகர சபையிடம் கையளிக்கப்பட்டது.

யாழ் மாநகர முதல்வர் மணிவண்ணனிடம், நல்லூர் கந்தசுவாமி தேவஸ்தானத்தின் 11ஆவது நிர்வாக அதிகாரி குமரேஷ் சயந்தன குமாரதாஸ் மாப்பாண முதலியாரால், நல்லூர் ஆலய வளாகத்தினுள் வைத்து இன்று பிற்பகல் 5.30 மணியளவில் சம்பிரதாயபூர்வமாக செங்கோல் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

IMG 20211119 WA0023 1

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
1618851994 heroin boat
செய்திகள்இலங்கை

சீனிகம ஹெரோயின் கடத்தல் வழக்கு: மேலும் மூவர் கைது; 5.4 கிலோ ஹெரோயினும், 10.8 மில்லியன் ரூபா பணமும் பறிமுதல்!

சீனிகமப் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் மூன்று பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், மேலும் மூன்று...

25 690f41c5a622b
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்: யாழ்ப்பாணம் மானிப்பாயில் பெண் உட்பட 3 சந்தேகநபர்கள் கைது!

கொழும்பு – கொட்டாஞ்சேனைப் பகுதியில் நேற்று (நவம்பர் 8) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில்,...

25 6906f19b49c03
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

பொலனறுவை வெலிகந்தையில் சோகம்: டிரக்டர் மோதி வீதியைக் கடந்த 8 வயது சிறுவன் பலி!

பொலனறுவை, வெலிகந்த – அசேலபுரப் பகுதியில் நேற்று (நவம்பர் 8) இரவு இடம்பெற்ற வீதி விபத்து...

image b8b525779a
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி: இஸ்தான்புல் பேச்சுவார்த்தை உடன்பாடின்றி முறிந்தது – அவநம்பிக்கை அதிகரிப்பு!

துருக்கியின் இஸ்தான்புல் நகரில் நடந்து வந்த பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு இடையேயான அமைதிப்...