school
செய்திகள்இலங்கை

தரம் 10 – 13 கற்றல் செயற்பாடுகள் ஆரம்பம்

Share

அனைத்து பாடசாலைகளிலும் தரம் 10 – தரம் 13 வரையான மாணவர்களுக்கான கற்றல் செயற்பாடுகள் நாடளாவிய ரீதியில், இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

கொரோனா பரவல் காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த கல்விச் செயற்பாடுகள், தற்போது பகுதி பகுதியாக தற்போது மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

ஆரம்ப பிரிவு மாணவர்களுக்கான கற்றல் செயற்பாடுகள் கடந்த 25 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட நிலையில், தற்போது தரம் 10 முதல் 13 வரையான கற்றல் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பில், கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவிக்கையில்,

கற்றல் நடவடிக்கைகளை மேல ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகள் அனைத்து பூர்த்திசெய்யப்பட்டுள்ளன.
க.பொ.த சாதாரணதர மற்றும் உயர்தர பரீட்சைகளை மேற்கொள்ளும் நோக்கில் இந்த வகுப்புக்களுக்கான கற்றல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. – என்றார்.

பாடசாலைக்கு வருகைதரும் மாணவர்கள், முகக்கவசம் அணிதல், கைகளைக் கழுவுதல் மற்றும் சமூக இடைவெளியைப் பேணுதல் உள்ளிட்ட சுகாதார வழிகாட்டல்களைப் பின்பற்றுவது கட்டாயமாமாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
62a15150 5261 11f0 a2ff 17a82c2e8bc4.jpg
செய்திகள்உலகம்

வரலாறு படைத்த ஜோஹ்ரான் மம்தானி: நியூயார்க் நகரின் முதல் முஸ்லிம் மற்றும் இளம் மேயராகத் தேர்வு!

அமெரிக்காவின் நியூயோர்க் நகர மேயராக இருந்தவர் எரிக் ஆடம்ஸ். இவர் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டு...

11ad0a96d3aaa13d73a54e4883f2f59c
உலகம்செய்திகள்

கென்டகி விமான நிலையத்தில் கோர விபத்து: சரக்கு விமானம் தரையில் விழுந்து தீப்பிடித்தது – 3 பேர் பலி!

அமெரிக்காவின் கென்டகி மாகாணம், லுயிஸ்விலா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ஹவாய் மாகாணம் ஹொனொலுலு நகருக்கு...

23 64b883bc2cf55
செய்திகள்இலங்கை

வடமேல் மாகாண மக்களுக்கு மகிழ்ச்சிச் செய்தி: ஒரு நாளில் தேசிய அடையாள அட்டை சேவை குருணாகலில் ஆரம்பம்!

வடமேல் மாகாண மக்களின் வசதி கருதி, தேசிய அடையாள அட்டையை ஒரு நாளில் வழங்கும் சேவை...