school
செய்திகள்இலங்கை

தரம் 10 – 13 கற்றல் செயற்பாடுகள் ஆரம்பம்

Share

அனைத்து பாடசாலைகளிலும் தரம் 10 – தரம் 13 வரையான மாணவர்களுக்கான கற்றல் செயற்பாடுகள் நாடளாவிய ரீதியில், இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

கொரோனா பரவல் காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த கல்விச் செயற்பாடுகள், தற்போது பகுதி பகுதியாக தற்போது மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

ஆரம்ப பிரிவு மாணவர்களுக்கான கற்றல் செயற்பாடுகள் கடந்த 25 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட நிலையில், தற்போது தரம் 10 முதல் 13 வரையான கற்றல் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பில், கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவிக்கையில்,

கற்றல் நடவடிக்கைகளை மேல ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகள் அனைத்து பூர்த்திசெய்யப்பட்டுள்ளன.
க.பொ.த சாதாரணதர மற்றும் உயர்தர பரீட்சைகளை மேற்கொள்ளும் நோக்கில் இந்த வகுப்புக்களுக்கான கற்றல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. – என்றார்.

பாடசாலைக்கு வருகைதரும் மாணவர்கள், முகக்கவசம் அணிதல், கைகளைக் கழுவுதல் மற்றும் சமூக இடைவெளியைப் பேணுதல் உள்ளிட்ட சுகாதார வழிகாட்டல்களைப் பின்பற்றுவது கட்டாயமாமாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...