1a7053a65891bb57e745b43fa7275c4ed35c5c6d
செய்திகள்அரசியல்இலங்கை

டிட்வா பேரிடரால் வீடுகளை இழந்தவர்களுக்கு ரூ. 1 கோடி நிதி: தாம் விரும்பிய மாவட்டத்தில் குடியேற அரசாங்கம் அனுமதி!

Share

‘டிட்வா’ சூறாவளி மற்றும் பேரிடரால் தமது வீடுகள் மற்றும் காணிகளை முழுமையாக இழந்த மக்கள், அவர்கள் விரும்பிய எந்தவொரு மாவட்டத்திலும் குடியேற அரசாங்கம் அனுமதி அளித்துள்ளதாக வீடமைப்பு அமைச்சர் சுசில் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

வேறு மாவட்டங்களில் குடியேற விரும்புபவர்களுக்கு வீடமைப்பு மற்றும் காணி கொள்வனவுக்காக ஒரு கோடி ரூபாய் (ரூ. 10,000,000) நிதி அரசாங்கத்தால் வழங்கப்படும்.

பயனாளர்கள் உரிய நடைமுறைகளைப் பின்பற்றித் தாமே காணியைத் தெரிவு செய்து கட்டுமானப் பணிகளை முன்னெடுக்க வேண்டும். கட்டுமானப் பணிகளின் முன்னேற்றத் தரவுகளை அதிகாரிகளிடம் சமர்ப்பிப்பதன் மூலம் கட்டம் கட்டமாக நிதியைப் பெற்றுக்கொள்ளலாம்.

2026 ஆம் ஆண்டுக்கான பாதீட்டு ஒதுக்கீட்டின் கீழ் தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் 16,000 வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளன. இதில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கான மீள்குடியேற்ற வீட்டுத் திட்டங்களும் உள்வாங்கப்பட்டுள்ளன.

பேரிடருக்குப் பின்னரான வீடமைப்புப் பணிகளுக்காக மட்டும் குறைநிரப்புப் பிரேரணை மூலம் 100 பில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த அனைத்து வீடமைப்புத் திட்டங்களும் எதிர்வரும் 2026 ஜனவரி மாதம் முதல் ஆரம்பிக்கப்படவுள்ளன.

பாதிக்கப்பட்ட மக்களின் அபிலாஷைகளை மதித்து, அவர்களின் விருப்பத்திற்கு ஏற்பவே இறுதித் தீர்மானங்கள் எட்டப்படும் என அமைச்சர் மேலும் உறுதியளித்துள்ளார்.

 

 

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...