gover
செய்திகள்அரசியல்இலங்கை

இராஜாங்க அமைச்சர்களுக்கு ஆப்பு! – செலவுகளை கட்டுப்படுத்த அரசு திட்டம்

Share

அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களின் கீழ் உள்ள நிறுவனங்களின் செலவுகளை மேலும் கட்டுப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதற்கான சிறப்பு ஆலோசனைகள் நிதி அமைச்சகத்தின் ஊடாக அனைத்து அமைச்சர்கள் மற்றும் அமைச்சின் செயலாளர்களுக்கு ஏற்கனவே அனுப்பப்பட்டுள்ளது .

வரவு-செலவு திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அபிவிருத்தி திட்டங்களை தவிர வேறு எந்த அபிவிருத்தி திட்டங்களுக்கும் நிதி கோரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மாகாண செலவுகள் முடிவடைந்து வரும் டிசம்பர் மாதம் 21 ஆம் தேதி வெளியிடப்படும் வர்த்தமானி மற்றும் கடந்த ஜனவரி மாதம் 12 ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி ஆகியவற்றில் குறிப்பிடப்பட்டுள்ள அரச செலவுகள் குறைப்பு தொடர்பான விடயங்கள் கடுமையாக அமுல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய நிதியத்தின் எரிபொருள் கொடுப்பனவு பெறும் அமைச்சர்கள் ,மந்திரிகள் மற்றும் நிறுவன தலைவர்களின் எரிபொருள் செலவுகள் மட்டுப்படுத்தப்பட வேண்டும் என்று அறிவுரைகள் வழங்கப்படுகின்றன.

மேலும் அரசு நிறுவனங்களின் தொலைபேசிகள், ஏனைய செலவுகள் மற்றும் அனைத்து செலவுகளும் கடுமையாக கட்டுப்படுத்தப்படவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
7 6
இலங்கைசெய்திகள்

வெகுவிரைவில் அடுத்த தேர்தலுக்கு வாய்ப்பு

எதிர்வரும் 2026ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதத்துக்கு முன்னதாக மாகாண சபைத் தேர்தலை நடத்துவது குறித்து அரசாங்கம்...

8 6
இலங்கைசெய்திகள்

எந்த அரசியல்வாதிகளும் தப்பவே முடியாது..! அநுர தரப்பு சூளுரை

இந்தோனேஷியாவிலிருந்து அழைத்து வரப்பட்ட பாதாள உலகக் குழு சந்தேக நபர்களிடமிருந்த 31 தொலைபேசிகள் தொடர்பில் விசாரணைகள்...

10 6
இலங்கைசெய்திகள்

நாடு நாடாக சென்று நிதி திரட்டுவேன்! அர்ச்சுனா எம்.பி பகிரங்கம்

மாகாண சபைத் தேர்தலுக்கான நிதியை நாடு நாடாக சென்று திரட்ட உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன்...

11 6
இலங்கைசெய்திகள்

ஹிட்லரின் பாதையில் அநுர அரசு – ரணில் கடும் குற்றச்சாட்டு

அநுர தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசு, ஒரு ஹிட்லர் போக்கிலான செயற்பாட்டை வெளிப்படுத்துகின்றது என்று...