gover
செய்திகள்அரசியல்இலங்கை

இராஜாங்க அமைச்சர்களுக்கு ஆப்பு! – செலவுகளை கட்டுப்படுத்த அரசு திட்டம்

Share

அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களின் கீழ் உள்ள நிறுவனங்களின் செலவுகளை மேலும் கட்டுப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதற்கான சிறப்பு ஆலோசனைகள் நிதி அமைச்சகத்தின் ஊடாக அனைத்து அமைச்சர்கள் மற்றும் அமைச்சின் செயலாளர்களுக்கு ஏற்கனவே அனுப்பப்பட்டுள்ளது .

வரவு-செலவு திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அபிவிருத்தி திட்டங்களை தவிர வேறு எந்த அபிவிருத்தி திட்டங்களுக்கும் நிதி கோரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மாகாண செலவுகள் முடிவடைந்து வரும் டிசம்பர் மாதம் 21 ஆம் தேதி வெளியிடப்படும் வர்த்தமானி மற்றும் கடந்த ஜனவரி மாதம் 12 ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி ஆகியவற்றில் குறிப்பிடப்பட்டுள்ள அரச செலவுகள் குறைப்பு தொடர்பான விடயங்கள் கடுமையாக அமுல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய நிதியத்தின் எரிபொருள் கொடுப்பனவு பெறும் அமைச்சர்கள் ,மந்திரிகள் மற்றும் நிறுவன தலைவர்களின் எரிபொருள் செலவுகள் மட்டுப்படுத்தப்பட வேண்டும் என்று அறிவுரைகள் வழங்கப்படுகின்றன.

மேலும் அரசு நிறுவனங்களின் தொலைபேசிகள், ஏனைய செலவுகள் மற்றும் அனைத்து செலவுகளும் கடுமையாக கட்டுப்படுத்தப்படவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
21 10
இலங்கைசெய்திகள்

இலங்கையில் உள்ள தாதியர்களுக்கு வெளியான மகிழ்ச்சித் தகவல்

இலங்கையில் மிக விரைவில் தாதியருக்கான பல்கலைக்கழகம் ஒன்று அமைக்கப்படும் என்று சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை...

22 9
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபையின் மேயரை நியமிப்பில் எடுக்கப்பட்ட தீர்மானம்

கொழும்பு மாநகர சபையின் மேயர் மற்றும் பிரதி மேயரை தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பு ஒன்று அடுத்த மாதம்...

20 15
இலங்கைசெய்திகள்

மகிந்தவை திடீரென சந்திக்க சென்ற ரணில்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சந்திக்க முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவரது வீட்டிற்கு சென்றுள்ளார்....

19 14
இலங்கை

உள்ளூராட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற ரணிலை சந்தித்த எதிர்க்கட்சிகள்

உள்ளூராட்சி மன்றங்களின் கூட்டு நிர்வாகத்தை அமைப்பது குறித்து விவாதிக்க, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) மற்றும்...