25 691732a967e25
செய்திகள்இலங்கை

அத்தியாவசிய கல்விக்கு 6% நிதி ஒதுக்கீடு எங்கே? – கிராமப் பாடசாலைகளை மூடினால் பாரிய மாணவர் போராட்டம் வெடிக்கும்: கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் எச்சரிக்கை!

Share

அரசாங்கம் அத்தியாவசிய கல்விக்காக நூற்றுக்கு ஆறு சதவீதம் (6%) நிதி ஒதுக்குவதாகத் தெரிவித்து, அதனை இந்த வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கீடு செய்யாமல் மக்களை ஏமாற்றுகின்றது என கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் குற்றம் சுமத்தியுள்ளது.

மட்டக்களப்பு பேருந்து தரிப்பு நிலையத்தில், ‘பாடசாலைகள் மூடப்படுகிறது, பாட புத்தகங்கள் இல்லை, மாணவர்கள் கல்வியை விட்டு வெளியேற்றம், சீர்திருத்தத்தை தோற்கடிப்போம்’ எனும் தொனிப் பொருளில், கிழக்கு பல்கலைக்கழக மாணவர் சங்கத் தலைவர் தலைமையில் இன்று (நவம்பர் 14) கையொழுத்துப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அவர்கள் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில் முன்வைத்த குற்றச்சாட்டுகள் மற்றும் எச்சரிக்கைகள்:

“அராசாங்கம் அத்தியாவசிய கல்விக்காக நூற்றுக்கு ஆறு சதவீதம் ஒதுக்குவதாக தெரிவித்து அதனை இன்று வரை வரவு செலவு திட்டத்தில் ஒதுக்கீடு செய்யாமல் மக்களை ஏன் ஏமாற்றுகிறது?”

கல்வி சீர்திருத்தம் என்ற போர்வையில் கிராமப்புறப் பாடசாலைகளை மூடுவது மற்றும் பாடப்புத்தகங்களை இல்லாமல் செய்வதை அரசாங்கம் உடனடியாக நிறுத்த வேண்டும்.

இந்தக் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், நாடளாவிய ரீதியில் பல்கலைக்கழக மாணவர் போராட்டம் வெடிக்கும் என கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

“இன்றைய இளைய சமுதாயத்தினர் நாளைய தலைவர்கள். அவர்களின் கல்வித் தேவைக்காக ஒதுக்கப்படும் நிதியை இடை நிறுத்தினால் மாணவர்களின் கல்வி எந்தளவுக்குச் செல்லும் மக்களே சிந்தியுங்கள்,” என அவர்கள் கூறியுள்ளனர்.

Share
தொடர்புடையது
articles2FeEKtDKWyXj0ebdxP7pcx
செய்திகள்உலகம்

வரலாற்று வெற்றி: அமெரிக்காவிடமிருந்து மீட்கப்படும் 3 பழைமைவாய்ந்த சோழர் காலச் சிலைகள்!

தமிழகத்தின் பல்வேறு ஆலயங்களில் இருந்து திருடப்பட்டு அமெரிக்காவிற்குக் கடத்தப்பட்ட மிகவும் பழைமைவாய்ந்த மூன்று சோழர் காலச்...

image 3a35841713
செய்திகள்இலங்கை

இலங்கையின் சுகாதாரத் துறையில் புதிய திருப்பம்: அனைத்துத் தொழிற்சங்கங்களும் ஒரே குழுவாக ஒன்றிணைந்து செயற்பட இணக்கம்!

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் நிறைவேற்று சபைக்கும் அனைத்து சுகாதார தொழிற்சங்கங்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று...

rajith
செய்திகள்இலங்கை

ராஜித சேனாரத்ன மீதான ஊழல் வழக்கு: விசாரணையின் முன்னேற்ற அறிக்கையைச் சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவு!

மீன்பிடித் துறைமுக மணல் அகழ்வுத் திட்டத்தில் அரசாங்கத்திற்குப் பாரிய நட்டத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் ஊழல் வழக்குத்...

images 1 8
செய்திகள்இலங்கை

சதொச வெள்ளைப்பூண்டு மோசடி: முன்னாள் விநியோக முகாமையாளர் உட்பட 3 பேர் கைது – பிணையில் விடுதலை!

2021 ஆம் ஆண்டு லங்கா சதொச நிறுவனத்தின் வெள்ளைப்பூண்டு கையிருப்பினை விற்பனை செய்ததில் அரசாங்கத்திற்கு 17...