ஆயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்குக் குடியுரிமை வழங்குவதற்காக ஒரு புதிய சட்டத்தை கனடா தயாரித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சட்டம் இந்த மாதம் பொது மன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நிலையில், தற்போது செனட்டின் (Senate) மதிப்பாய்வில் உள்ளது.
இந்தத் திட்டம் அங்கீகரிக்கப்பட்டவுடன், பின்வரும் பிரிவினர் குடியுரிமை பெற உரித்துடையவர்களாக மாறுவார்கள். கனேடிய பெற்றோருக்கு வெளிநாட்டில் பிறந்த குழந்தைகள். கனேடிய பெற்றோரால் தத்தெடுக்கப்பட்ட குழந்தைகள்.
ஒரு கனேடிய பெற்றோர் ஒரு குழந்தையைத் தத்தெடுத்து அல்லது தத்தெடுப்பதற்கு முன்பு கனடாவில் குறைந்தது மூன்று ஆண்டுகள் வசித்திருந்தால், அந்தக் குழந்தை குடியுரிமைக்குத் தகுதி பெறும்.
பழைய விதிகளின் கீழ் குடியுரிமையை இழந்தவர்களுக்கும் இது குடியுரிமையைப் பெற உதவும்.
இந்த புதிய விதிகள், குடும்பங்களை மீண்டும் இணைப்பதோடு, கனடாவில் அல்லது வெளிநாட்டில் வசிக்கும் அனைத்துக் கனேடியர்களுக்கும் சம உரிமைகள் இருப்பதை உறுதி செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சட்டத்தின் கீழ் குடியுரிமை பெற, பெற்றோரின் கனேடிய குடியுரிமைக்கான ஆதாரம், கனடாவில் செலவழித்த நேரத்தைக் காட்டும் ஆவணங்கள் மற்றும் பிறப்பு அல்லது தத்தெடுப்பு பதிவுகள் போன்ற ஆதாரங்கள் தேவைப்படும்.
செனட் ஒப்புதல் மற்றும் அரச ஒப்புதலுக்குப் பிறகு 2026ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் இந்தச் சட்டம் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.