thileepan
செய்திகள்இலங்கை

சம்பளம் வழங்க முடியாது அரசாங்கம் திண்டாட்டம்! – நாடாளுமன்ற உறுப்பினர் கு.திலீபன் தெரிவிப்பு

Share

கொரோனா காரணமாக ஏற்பட்ட வீழ்ச்சியினால் அரசாங்க ஊழியர்களுக்கு கூடுதல் சம்பளத்தினை வழங்கமுடியாது அரசாங்கம் திண்டாடுகின்றது என வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் கு. திலீபன் தெரிவித்துள்ளார்.

வவுனியா ஆச்சிபுரம் கிராமத்தில் 14 லட்சம் பெறுமதியில் கிராமப்புற மற்றும் பிராந்திய குடிநீர் விநியோக திட்டங்கள் இராஜாங்க அமைச்சின் ஊடாக அமைக்கப்படவுள்ள சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,

இந்தியாவின் அழுத்தத்தினால் மாகாணசபை தேர்தல் நடைபெறவில்லை. தீர்க்கமான முடிவெடுக்ககூடிய மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் உள்ள அரசாங்கம் அனைத்து உறுப்பினர்களுடனும் கலந்துரையாடியே இந்த தேர்தல் நடத்துவதாக தீர்மானித்துள்ளது.

எனினும் திகதியோ மாதமோ இன்றும் அறிவிக்கப்படவில்லை. ஆனால் இந்தியாவின் அழுத்தம் என்பது பொய். எமது நாடு சுயமாக ஒரு தீர்மானம் எடுக்ககூடிய வளம்மிக்க நாடு.

இந்நிலையில் புதிய திட்டங்களை வரப்போகும் வரவு செலவுத் திட்டத்தில் பார்த்து அறிந்துகொள்ளலாம். அதில் வறுமைக்கோட்டிற்குட்பட்ட கிராமங்களுக்கே முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக எமது வன்னி பிரதேசத்திற்கும். அதற்கு ஏனைய அமைச்சர்களும் இணக்கம் தெரிவித்துள்ளனர்.

அதுமட்டுமல்ல இன்று வாழ்க்கை செலவீனம் அதிகரித்துள்ளது என்பது நாட்டில் ஏற்பட்ட கொரோனா வீழ்ச்சியால் இன்று அரசாங்கம் அரச உத்தியோகத்தர்களுக்கான சம்பளத்தினை கொடுப்பதற்கு கூட பெரும் திண்டாட்டமான நிலை ஏற்படுகின்றது. அதனால்தான் அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றமும் இடம்பெற்றுள்ளது. இது நிரந்தரமானதல்ல. தற்காலிகமானது.

அத்துடன் சேதனப் பசளை திட்டத்தினை எமது அரசாங்கம் முன்னெடுத்தது. ஆனால் எதிர்க்கட்சிகளும் இங்குள்ள விதண்டாவாதிகளும் சேதனப்பசளை நாட்டிற்கு ஒவ்வாது விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர் என்கின்றனர்.

உயிருடன் விளையாடக்கூடிய விளையாட்டுத்தான் இரசாயன உரம். வவுனியா நொச்சுமோட்டை கிராமத்திற்கு அருகில் உள்ள கிராமத்தில் 4 அடி நிலத்தினை தோண்டினால் வெள்ளை கழியாக உள்ளது. அதற்கு காரணம் அங்கு போடப்பட்ட யூரியா உரம். அது எவ்வாளவு பாதிப்பானது.

எனவே எந்த திட்டத்தினை முன்னெடுத்தாலும் அது கடினமாகத்தான் இருக்கும் பின்னர் அது சரியாக வரும் அதனை நம்பலாம் என தெரிவித்தார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...