news 2 3 680x375 1
செய்திகள்இலங்கை

நாடாளுமன்ற நடைமுறை தெரியாத கோத்தா அரசு!!- எதிர்க்கட்சி கோஷம்

Share

கோத்தா அரசின் அமைச்சர்கள் நாடாளுமன்ற நடைமுறை தெரியாதவர்கள் என எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சபையில் கோஷம் எழுப்பியுள்ளனர்.

நிதி சட்ட மூலம் தொடர்பான வாக்கெடுப்பு நிறைவடைந்த பின்னர், நிதி அமைச்சிடம் கேள்வி கேட்பதற்கு எதிர்க்கட்சியினர் தயாராக இருந்தனர்.

கொரோனா முடக்கலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு முன்னர் 5 ஆயிரம் ரூபா வழங்கினீர்கள். இப்போது 2 ஆயிரம் ரூபா வழங்குகிறீர்கள். இந்த பயனாளர் தெரிவு எவ்வாறு நடைபெறுகிறது. எல்லோருக்கும் இந்த கொடுப்பனவு சென்றடைகிறதா என்று எதிர்க்கட்சியினரால் கேள்வி எழுப்பப்பட்டது.

இதன்போது சபையில் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச மற்றும் இராஜாங்க அமைச்சர் ஆகியோர் சபையில் இருக்கவில்லை .

கோபம் அடைந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள், உங்கள் அரசுக்கு நாடாளுமன்ற நடைமுறை தெரியாதா? கேள்விக்கு பதில் வழங்குவதற்கு சபையில் துறை சார்ந்த அமைச்சர் இல்லை என கேள்வி எழுப்பியமை குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
10 18
உலகம்செய்திகள்

காசாவில் கடும் பஞ்சம்: ஐ.நா சபை எச்சரிக்கை

காசாவில் உள்ள மக்கள் தற்போது கடும் பஞ்சத்தை எதிர்நோக்கியுள்ளதால் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுவதாக...

8 18
இலங்கைசெய்திகள்

சாட்டையைக் கையில் எடுத்துள்ள ஜனாதிபதி! அமைச்சர்கள் சிலருக்கு கட்டுப்பாடு

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அமைச்சர்கள் சிலர் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கடுமையான அதிருப்தி...

9 18
இலங்கைசெய்திகள்

மாணவியை தகாத முறைக்கு உட்படுத்திய ஆசிரியர் கைது

மாணவி ஒருவரை தகாத முறைக்கு உட்படுத்திய ஆசிரியர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். தெவினுவர பிரதேசத்தைச்...

7 18
உலகம்செய்திகள்

கூகுள் நிறுவனத்திற்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!

கூகுள் நிறுவனத்திற்கு அமெரிக்க நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி, 1.4 பில்லியன் டொலர் அபராதம்...