Ranjan Jayalal
செய்திகள்அரசியல்இலங்கை

முதலில் பாராளுமன்றிற்கு துவிச்சக்கர வண்டியில் செல்லுங்கள்! – அரசுக்கு தொழிற்சங்கத் தலைவர் பதிலடி

Share

எரிபொருள் நெருக்கடியினை முகாமைத்தும் செய்ய பொதுமக்கள் துவிச்சக்கர வண்டியை பயன்படுத்துவதற்கு முன்னர் 225 பாராளுமன்ற உறுப்பினர்களும் பாராளுமன்றிற்கு துவிச்சக்கர வண்டியில் செல்ல வேண்டும் என இலங்கை மின்சார சபை சேவை தொழிற்சங்கத்தின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

முதலில் அரசியல்வாதிகள் நாட்டு மக்களுக்கு சிறந்த எடுத்துக்காட்டாக செயற்பட வேண்டும் என இலங்கை மின்சார சபை சேவை தொழிற்சங்கத்தின் தலைவர் ரஞ்சன் ஜயலால் தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மின்சார சபைக்கு மீள்நிரப்பல் (ரீலோட்) முறைமையில் எரிபொருளை 3 நாட்களுக்கு தேவையான அளவில் விநியோகிக்கிறது. எதிர்வரும் நாட்களில் மின்விநியோகம் தடைப்படும் என்பதை அரசாங்கம் மறைமுகமாக குறிப்பிட்டு வருகிறது.

பொதுப் பயணிகள் துவிச்சக்கர வண்டியை பாவித்தால் எரிபொருள் நெருக்கடியினை முகாமைத்துவம் செய்யலாம். உடலுக்கும்,சுற்று சூழலுக்கும் ஆரோக்கியமானது என சுற்றாடற்துறை அமைச்சர் குறிப்பிட்டுள்ளமை கவனிக்கத்தக்கது.

பொதுப் பயணிகள் துவிச்சக்கர வண்டியை பயன்படுத்த முன்னர் 225 பாராளுமன்ற உறுப்பினர்கள் முதலில் பாராளுமன்றிற்கும், பொது நிகழ்ச்சிகளுக்கும் துவிச்சக்கர வண்டியில் செல்ல வேண்டும். ஒரு பாராளுமன்ற உறுப்பினரின் பாவனைக்கு அதிகளவில் எரிபொருள் செலவாகுகிறது.

நாட்டு மக்களுக்கு ஆலோசனை வழங்க முன் அரசியல்வாதிகள் அனைவரும் மக்களுக்கு சிறந்த எடுத்துக்காட்டாக செயற்பட வேண்டும். தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு துவிச்சக்கர வண்டியில் பாராளுமன்றம் செல்ல முடியாவிடின் புகையிரதம், அரச மற்றும் தனியார் பேருந்துகளை பயன்படுத்த முடியும்.

கடந்த அரசாங்கத்தின் காலத்தில் எரிபொருளின் விலை அதிகரிக்கப்பட்ட போது பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உட்பட அவரது தரப்பினர்கள் பாராளுமன்றிற்கு துவிச்சக்கர வண்டியில் சென்றார்கள். தற்போதும் செல்லலாம் – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
MediaFile 1 10
செய்திகள்அரசியல்இலங்கை

ஒன்றிணைந்த எதிர்க்கட்சி கூட்டத்தில் துப்பாக்கியுடன் காணப்பட்ட முன்னாள் எம்.பி: விசாரணைக்காகப் பறிமுதல்!

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதித லொக்குபண்டாரவிடம் (Uditha Lokubandara) இருந்த ஒரு கைத்துப்பாக்கியை நுகேகொடப் பொலிஸ்...

parliament2
செய்திகள்அரசியல்இலங்கை

அனர்த்த நிலைமை குறித்துப் பேச: பாதிக்கப்பட்ட மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு!

நாட்டில் ஏற்பட்டுள்ள அனர்த்த நிலைமைகள் குறித்து விவாதிப்பதற்காக, அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களையும் சேர்ந்த பாராளுமன்ற...

images 6 2
செய்திகள்இலங்கை

வாகன இறக்குமதி நிலையான மட்டத்தை அடைந்தது; டொலர் கையிருப்பு உயரும்: மத்திய வங்கி ஆளுநர் நம்பிக்கை!

இலங்கையில் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் வாகன இறக்குமதி குறிப்பிடத்தக்க அளவில் நிலையான மட்டத்தை அடைந்துள்ளதாக,...