taliban
செய்திகள்உலகம்

தற்கொலை குண்டுதாரிகளுக்கு பரிசில்கள்- நிறைவேறுமா தலிபான்களின் நோக்கம்?

Share

ஆப்கானிஸ்தானில் தற்கொலை குண்டுதாரிகளின் குடும்பத்தினருக்கு தலிபான்களால் பரிசில்கள் வழங்கப்பட்டு வருகிற நடவடிக்கை சர்வதேச அளவில் ஆச்சரியத்தை ஏற்படுத்தயுள்ளது.

ஆப்கானின் படைகள் மற்றும்  அமெரிக்கப் படைகளுக்கு எதிராக  மேற்கொண்ட தற்கொலைக்குண்டுதாரிகளின் குடும்பத்தினதினரை ஊக்குவிக்கும் முகமாக தலிபான்ககளால் பரிசில்கள் வழங்கப்பட்டு வருகிறது.

ஆப்கானிஸ்தாலிருந்து கடந்த ஓகஸ்ட் மாதத்தின் இறுதிப் பகுதியில், அமெரிக்கப் படையினர் வெளியேறியிருந்தனர்.

இதனையடுத்து ஆப்கானிஸ்தானின் ஆட்சி தலிபான்களின் வசமானது.

இந்நிலையில் அமெரிக்காப் படையினர் ஆப்கானிஸ்தானில் நிலைகொண்டிருந்த காலப்பகுதிகளில், அவர்கள் மீதும், ஆப்கானிஸ்தான் படையினர் மீதும் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களை நடாத்திய தலிபான்களுக்கு வெகுமதியளிக்கும் பொருட்டு, உயிரிழந்த தலிபான்களின் குடும்பங்களுக்கு, தலிபான் ஆட்சியாளர்களால் வெகுமதியளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கமைய தற்கொலைத் தாக்குதல்களை மேற்கொண்ட தலிபான் இயக்கத்தைச் சேர்ந்தோரின் குடும்பத்தினருக்கு தலா 10 ஆயிரம் ஆப்கான் நாணயங்களை வழங்கவும், அக்குடும்பங்களுக்கு சொந்த நிலத்தை வழங்கவும் தலிபான் ஆட்சியாளர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இச்சம்பவம் மனித உரிமை அமைப்புக்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

#WORLD

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
02 29
செய்திகள்இலங்கை

ஈரானுடன் கைக்கோர்க்கும் மைத்திரி: தூதுவர் அலிரேசா டெல்கோஷுடன் திடீர் சந்திப்பு!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் இலங்கைக்கான ஈரானியத் தூதுவர் அலிரேசா டெல்கோஷ் (Alireza Delkhosh)...

02 28
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மருத்துவர்களுக்குச் சனிக்கிழமை விடுமுறை? – அரசாங்கத்திற்கு மருத்துவ நிபுணர்கள் சங்கம் அவசர கோரிக்கை!

நாட்டில் நிலவி வரும் கடுமையான எரிபொருள் நெருக்கடி மற்றும் அதீத விலை உயர்வு காரணமாகச் சுகாதாரத்...

02 27
செய்திகள்உலகம்

16 வயதிற்குட்பட்டோருக்குச் சமூக ஊடகத் தடை: பிரித்தானியப் பிரபுக்கள் சபையில் மீண்டும் தீர்மானம் நிறைவேற்றம்!

16 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்யும் முன்மொழிவுக்கு ஐக்கிய இராச்சியத்தின் பிரபுக்கள்...

02 26
செய்திகள்உலகம்

எரிசக்தி ஒத்துழைப்பு: ரஷ்யாவின் உயர்மட்டத் தூதுக்குழு இன்று இலங்கை வருகை!

ரஷ்ய எரிசக்தி பிரதி அமைச்சர் ரோமன் மார்ஷவின் (Roman Marshavin) தலைமையிலான உயர்மட்ட இராஜதந்திரத் தூதுக்குழுவொன்று...