Basil Rajapaksa 1
செய்திகள்இலங்கை

எரிபொருள் விலை அதிகரிப்பு? – பஸில் விளக்கம்

Share

எரிபொருள் விலையை அதிகரிப்பதற்கான எண்ணம் தற்போது இல்லை என்று நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச இன்று தெரிவித்தார்.

எரிபொருள் விலையை அதிகரிப்பதற்கு அனுமதி கோரி அடுத்தவாரம் அமைச்சரவை யோசனை ஒன்று முன்வைக்கப்படவுள்ளதென தகவல் வெளியாகி உள்ளதாகவும் விலை அதிகரிக்க உத்தேசம் உள்ளதா என்றும் ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளிக்கும்போதே நிதியமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

விலை அதிகரிக்கும் நிலை ஏற்பட்டால் அது குறித்து மகிழ்ச்சி அடைய முடியாது எனவும் தெரிவித்தார்.

எனினும், எரிபொருள் விலை அதிகரிக்கப்படும் என்றோ அதிகரிக்கப்படாது என்றோ நிதியமைச்சர் உறுதியாக எதனையும் தெரிவிக்கவில்லை.

அதேவேளை, மத்திய வங்கியால் தொடர்ச்சியாக பணம் அச்சிடப்படுவது தொடர்பிலும் இதன்போது கேள்வி எழுப்பட்டது.

” பணம் அச்சிடுவது தற்போதைக்கு நிறுத்தப்படாது, தனது கையெழுத்திட்ட பணம் வெளிவரும் வரை அது தொடரட்டும்.” – எனவும் நகைச்சுவையாக அமைச்சர் குறிப்பிட்டார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
p0n6jgg8
செய்திகள்உலகம்

ஈரான் மீதான தாக்குதல்: உலகப் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள கடும் பாதிப்புகள்

கடந்த பிப்ரவரி 28-ம் தேதி ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து மேற்கொண்ட கூட்டுத்...

26 69b351d688c88
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணத்தில் சட்டவிரோத இலத்திரனியல் பொருட்கள் மீட்பு: பொலிஸார் தீவிர விசாரணை

யாழ்ப்பாணப் பகுதியில் அனுமதி இன்றி சட்டவிரோதமான முறையில் களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டிருந்த இலத்திரனியல் பொருட்கள் தொகுதி ஒன்றை...

20 12
செய்திகள்இந்தியா

இலங்கை – இந்திய அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர்: ஆகஸ்ட் மாதம் நிவாரண நிதி திரட்டும் போட்டிகள்!

கடந்த நவம்பர் மாதம் இலங்கையைத் தாக்கிய ‘டித்வா’ (Ditwah) சூறாவளியால் ஏற்பட்ட பெரும் பாதிப்புகளிலிருந்து மீண்டு...

19 10
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் தங்கத்தின் விலையில் வீழ்ச்சி: இன்றைய நிலவரம்!

இலங்கை நகை வியாபாரிகள் சங்கத்தின் தரவுகளின்படி, கடந்த சில நாட்களாக நிலவிய ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியில்,...