dilum amunugama
செய்திகள்இலங்கை

தனியார் பஸ்களுக்கு இ.போ.ச ஊடாக எரிபொருள்!

Share

“பொது போக்குவரத்து சேவையில் ஈடுபடும் தனியார் பஸ்களுக்கு, இலங்கை போக்குவரத்து சபை ஊடாக எரிபொருளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.” – என்று போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.

இது தொடர்பான கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது எனவும், அனுமதி பத்திரமுள்ள தனியார் பஸ்களுக்கு எந்தெந்த இபோச நிலையங்களில் எரிபொருளை பெற்றுக்கொள்ளலாம் என்ற விவரம் உரிய வகையில் அறிவிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திடம் இருந்து எரிபொருள் கிடைக்கப்பெற்ற கையோடு, அதனை பகிர்ந்தளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், அதற்கான பொறிமுறை உருவாக்கப்பட்டுள்ளது எனவும் போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் கூறினார்.

அதேவேளை, தமக்கு எரிபொருளை முன்னுரிமை அடிப்படையில் பெற்றுக்கொடுப்பதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...