106983766 1638471355360 gettyimages 1355744075 coronaomicronvariante
செய்திகள்உலகம்

மீண்டும் முடக்கம்?? – விஸ்வரூபமெடுக்கும் ஒமெக்ரோன் அலை!

Share

மிக வேகமாகப் பரவிவருகின்ற ஒமெக்ரோன் வைரஸ் ஐனவரி இரண்டாவது வாரத்தில் அதாவது அடுத்த வாரமளவில் உச்ச கட்டத் தொற்றை எட்டும் என்று நிபுணர்கள் எதிர்வு கூறியுள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில் 2லட்சத்து 61ஆயிரத்து 481 (261,481) புதிய தொற்றுக்கள் பதிவாகியிருக்கின்றன. இருநூறுக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

ஒமெக்ரோன் வைரஸ் தொற்று பாடசாலைகளை இயக்க முடியாத நெருக்கடிகளை ஏற்படுத்தி வருகிறது. ஆசிரியர்கள் இடையே இதுவரை உறுதிப்படுத்தப்பட்ட தொற்றுக்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 631 என்றும், திங்களன்று பாடசாலைகள் ஆரம்பித்த பிறகு கடந்த நான்கு நாட்களில் மட்டும் தொற்றுக் கண்டறியப்பட்ட மாணவர்களது எண்ணிக்கை 47 ஆயிரத்து 453 என்றும் அறிக்கைகள் வெளியாகியுள்ளன.

தொற்றுக்குள்ளான ஒன்பது ஆயிரம் வகுப்பறைகள் மூடப்பட்டிருக்கின்றன. தொற்று உறுதியான மாணவர்களும் தொடர்புடையோருமாக வகுப்புகளுக்கு வராதவர்களது எண்ணிக்கை நாளாந்தம்
பல ஆயிரக்கணக்கில் அதிகரித்து வருகிறது. தொற்று மற்றும் தொற்றுடன் தொடர்புபட்ட தமது பிள்ளைகளை பாடசாலைகளில் இருந்து இடையில் வீட்டுக்கு அழைத்து அவர்களை வைரஸ்
பரிசோதனைகளுக்கு உட்படுத்திப் பராமரிப்பதில் பெற்றோரும் பாதுகாவலர்களும் பெரும் சிரமங்களை அனுபவித்து வருகின்றனர்.

பாடசாலை ஆசிரியர்கள் அனைவருக்கும் மருத்துவர்கள் அணிகின்ற மிகு திறன் கொண்ட மாஸ்க்குகளை (surgical masks) இம்மாத இறுதிக்குள் விநியோகிப்பதற்கு அரசு நடவடிக்கை எடுத்திருப்பதாக பிரதமர் ஜீன் காஸ்ரோ இன்று தெரிவித்திருக்கிறார்.

FFP2 எனப்படுகின்ற அந்த வகை மாஸ்க்குகள் சாதாரணமானவற்றை விட அதிக பாதுகாப்பு அளிக்கக் கூடியவை என்று கருதப்படுகிறது. ஒமெக்ரோன் தொற்றைத் தவிர்ப்பதற்கு FFP2 மாஸ்க் சிறந்ததா என்பதை அறிவதற்காக அரசு நாட்டின் பொதுச் சுகாதார அதிகார சபையின் (Haut Conseil de santé publique) முடிவுக்காகக் காத்திருக்கிறது என்றும் பிரதமர் கூறியிருக்கிறார்.

இதேவேளை, பாரிஸ் பிராந்தியத்தின் வில்ப்பனில் அமைந்துள்ள சிறைச்சாலையில் (La maison d’arrêt de Villepinte – Seine-Saint-Denis) தடுத்து வைக்கப்பட்டிருக்கும் சுமார் 800 கைதிகளில் 200 பேரை ஒமெக்ரோன் வைரஸ் பெரும் கொத்தாகப் பீடித்திருக்கிறது.

179 கைதிகளில் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர்களும் அவர்களோடு தொடர்புடைய கைதிகளும் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர் எனத் தெரிவிக்கப்படுகிறது. கைதிகளைப் பார்வையிடுவதற்காக வெளி ஆட்கள் செல்வதை சிறை நிர்வாகம் தடைசெய்துள்ளது.

பிரான்ஸின் சிறைகளில் இதுவரை கைதிகள் மற்றும் பணியாளர்கள் அடங்கலாக மொத்தம் 27 ஆயிரத்து 370 பேர் தொற்றுக்குள்ளாகி இருக்கின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

#World

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
14 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

2026 ஜனவரியில் இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பு 6.8 பில்லியன் டொலராக உயர்வு!

2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கான இலங்கையின் பொருளாதார நிலவரம் குறித்த அறிக்கையை இலங்கை மத்திய...

12 3
செய்திகள்அரசியல்இலங்கை

இலங்கையின் புதிய அரசியலமைப்பு முயற்சி: 30 ஆண்டுகளுக்கும் மேலாக முடிவின்றித் தொடரும் பயணம்!

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட புதிய அரசியலமைப்பை உருவாக்கும் முயற்சி, பல...

11 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மகளின் நினைவாக இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 4.5 ஏக்கர் நிலத்தை தானமாக வழங்கிய தந்தை!

இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மற்றும் காணியற்ற ஏழைக் குடும்பங்களுக்காக, தனது 16 வயது மகளின் நினைவாக...

10 4
உலகம்செய்திகள்

ஈரான் மீதான கூட்டுத் தாக்குதல்: பதற்றத்தைக் குறைக்க இந்தியா வலியுறுத்தல்!

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் இணைந்து ஈரானில் உள்ள ராணுவத் தளங்கள் மீது தாக்குதல்களை நடத்தியுள்ள...