24168297 web1 covidtesting ISJ 210120 c 1 scaled
செய்திகள்இலங்கை

வௌிநாடு சென்று நாடு திரும்பும் இலங்கையர்களுக்கு இலவச PCR பரிசோதனை!

Share

வேலைக்காக வௌிநாடு சென்று நாடு திரும்புகின்ற இலங்கையர்களுக்கு இலவச PCR பரிசோதனைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள பணியாளர்களுக்கு மட்டுமே கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கட்டணம் அறவிடப்படாது இலவச பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது

PCR பரிசோதனைகளுக்கான  கட்டணங்களை வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியக தொழிலாளர் நலன்புரி நிதியத்தின் ஊடாக ஒதுக்குமாறு துறைசார் அமைச்சு, பணியகத்துக்கு ஆலோசனை வழங்கியுள்ளது.

நாடு திரும்புகின்ற இலங்கை பணியாளர்களை தனிமைப்படுத்தல் விதிகளுக்கு அமைவாக விரைவாக அவர்களது வீடுகளுக்கு அனுப்பும் செயற்பாடுகளும் மேற்கொள்ளப்படுவதாக வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியக பிரதி பொது முகாமையாளர் மங்கள ரந்தெனிய தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
18 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அனுராதபுரம் புதைபொருள் அகழ்வு வழக்கு: 7 பேர் குற்றத்தை ஒப்புக்கொண்ட நிலையில் அபராதம்; முன்னாள் DIG தொடர்ந்து விளக்கமறியலில்

அனுராதபுரம், ஸ்ரவஸ்திபுர, திம்பிரிகடவெல பகுதியில் தொல்பொருள் பெறுமதியான நிலத்தில் சட்டவிரோத புதைபொருள் அகழ்வில் ஈடுபட்டதாகக் கைது...

17 2
செய்திகள்இலங்கை

மத்திய கிழக்கு போர் பதற்றம்: வெளிநாட்டு தபால் சேவைகளில் பெரும் தாமதம் – தபால் மா அதிபர் எச்சரிக்கை

sri-lanka-post-foreign-mail-delay-war மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் தீவிரமான போர்ச் சூழல் காரணமாக, இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு...

16 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் புதிய உச்சத்தைத் தொட்ட தங்கத்தின் விலை: ஒரே நாளில் 15,000 ரூபா அதிகரிப்பு

இலங்கையில் தங்கத்தின் விலை இன்று (மார்ச் 03, 2026) அதிரடியாக அதிகரித்துள்ளது. உலகச் சந்தையில் நிலவும்...

15 2
உலகம்செய்திகள்

ஈரான் கெராஷ் பகுதியில் நிலநடுக்கம்: போருக்கு அமெரிக்க மக்களிடையே எதிர்ப்பு மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வு

ஈரானின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள கெராஷ் (Gerash) நகரில் இன்று (மார்ச் 3, 2026) ரிக்டர்...