வேலைக்காக வௌிநாடு சென்று நாடு திரும்புகின்ற இலங்கையர்களுக்கு இலவச PCR பரிசோதனைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள பணியாளர்களுக்கு மட்டுமே கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கட்டணம் அறவிடப்படாது இலவச பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது
PCR பரிசோதனைகளுக்கான கட்டணங்களை வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியக தொழிலாளர் நலன்புரி நிதியத்தின் ஊடாக ஒதுக்குமாறு துறைசார் அமைச்சு, பணியகத்துக்கு ஆலோசனை வழங்கியுள்ளது.
நாடு திரும்புகின்ற இலங்கை பணியாளர்களை தனிமைப்படுத்தல் விதிகளுக்கு அமைவாக விரைவாக அவர்களது வீடுகளுக்கு அனுப்பும் செயற்பாடுகளும் மேற்கொள்ளப்படுவதாக வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியக பிரதி பொது முகாமையாளர் மங்கள ரந்தெனிய தெரிவித்துள்ளார்.
Leave a comment