AP20222207925030
செய்திகள்இலங்கை

“மக்களுடனான பிணைப்பே ஆரோக்கியத்தின் ஆதாரம்” – முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச

Share

தங்காலை, கால்டன் இல்லத்தில் இருந்தவாறு தனது அதிகாரப்பூர்வ சமூக ஊடகப் பக்கத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச வெளியிட்டுள்ள பதிவில், மக்களின் அன்பு மற்றும் தொடர்புகளே தமது உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்குக் காரணம் என்று தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், “மக்களுடன் சுதந்திரமாகப் பழகுவதையே நான் பெரிதும் விரும்புகிறேன். மக்களுடன் இருப்பது எனக்கு ஒருபோதும் சோர்வைத் தருவதில்லை; இது அனைவருக்கும் கிடைக்காத ஒரு அரிய பிணைப்பு மற்றும் பழக்கமாகும்.

மக்களின் மனதில் தோன்றும் நம்பிக்கை மற்றும் பாசம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட உறவுகளே ஒரு தலைவரின் சகிப்புத்தன்மையையும், சவால்களைத் தைரியமாக எதிர்கொள்ளும் ஆற்றலையும் வளர்க்கிறது. மக்கள் மத்தியில் இருப்பது எனக்கு உடல் ரீதியான பலத்தையும், மன ஆரோக்கியத்தையும் அளிக்கிறது.

எப்போதும் தவறாமல் வந்து நலம் விசாரித்து அன்புடன் உரையாடும் என் பிரியமான மக்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். என் அரசியல் சகாக்களையும் நினைவுகூர்கிறேன். உங்கள் அனைவருக்கும் நன்றி,” என்று குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
02 29
செய்திகள்இலங்கை

ஈரானுடன் கைக்கோர்க்கும் மைத்திரி: தூதுவர் அலிரேசா டெல்கோஷுடன் திடீர் சந்திப்பு!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் இலங்கைக்கான ஈரானியத் தூதுவர் அலிரேசா டெல்கோஷ் (Alireza Delkhosh)...

02 28
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மருத்துவர்களுக்குச் சனிக்கிழமை விடுமுறை? – அரசாங்கத்திற்கு மருத்துவ நிபுணர்கள் சங்கம் அவசர கோரிக்கை!

நாட்டில் நிலவி வரும் கடுமையான எரிபொருள் நெருக்கடி மற்றும் அதீத விலை உயர்வு காரணமாகச் சுகாதாரத்...

02 27
செய்திகள்உலகம்

16 வயதிற்குட்பட்டோருக்குச் சமூக ஊடகத் தடை: பிரித்தானியப் பிரபுக்கள் சபையில் மீண்டும் தீர்மானம் நிறைவேற்றம்!

16 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்யும் முன்மொழிவுக்கு ஐக்கிய இராச்சியத்தின் பிரபுக்கள்...

02 26
செய்திகள்உலகம்

எரிசக்தி ஒத்துழைப்பு: ரஷ்யாவின் உயர்மட்டத் தூதுக்குழு இன்று இலங்கை வருகை!

ரஷ்ய எரிசக்தி பிரதி அமைச்சர் ரோமன் மார்ஷவின் (Roman Marshavin) தலைமையிலான உயர்மட்ட இராஜதந்திரத் தூதுக்குழுவொன்று...