5ஆவது இந்து சமுத்திர மாநாட்டில் பங்கேற்குமாறு ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்கவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த மாநாடு , எதிர்வரும் டிசம்பர் 3 ஆம் திகதி முதல் 5 ஆம் திகதிவரை அபுதாபியில் நடைபெறவுள்ளது.
2016 -2019 காலப்பகுதியில் மாநாட்டின் தலைவராக ரணில் விக்கிரமசிங்க செயற்பட்டு வந்துள்ளார்.
மாநாட்டில் பங்கேற்கும் ரணில் விக்கிரமசிங்க டிசம்பர் 5 ஆம் திகதி உரையாற்றவுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் இலங்கையில் ஜனாதிபதியும் இதில் கலந்துக்கொண்டு தலைமை உரையாற்றவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
#SriLankaNews