Sarath Fonseka
செய்திகள்அரசியல்இலங்கை

மக்கள் எழுச்சியைக் கட்டுப்படுத்த முடியாது என்கிறார் பொன்சேகா!!!

Share

எதிரணி உறுப்பினர்களை ஒடுக்கினாலும், மக்கள் எழுச்சியை உங்களால் கட்டுப்படுத்த முடியாது. விரைவில் தக்க பாடம் புகட்டுவார்கள்.” – இவ்வாறு அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகா.

நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற வரவு- செலவுத் திட்டமீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்கள் எந்நாளும் ஏமாற்றப்படுகின்றனர். இம்முறையும் பாதீடு ஊடாக ஏமாற்றப்பட்டுள்ளனர்.

மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு வீடுகளை நிர்மாணிப்பதற்கு 500 மில்லியன் ரூபா ஒதுக்கப்படும் என நிதி அமைச்சர் அறிவித்துள்ளார்.

பெருந்தோட்டப்பகுதிகளில் வாழும் மக்களுக்கு குறைந்தபட்சம் ஒரு லட்சம் வீடுகளாவது தேவை. அப்படியானால் ஒரு வீட்டுக்கு 5 ஆயிரம் ரூபாவே ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த தொகையை வைத்துக்கொண்டு மலசலக்கூடம் ஒன்றைக்கூட கட்டமுடியாது.

தோட்ட மக்களுக்கு வீடொன்றை நிர்மாணிப்பதற்கு குறைந்தபட்சம் ஒன்றரை மில்லியன் ரூபா தேவை.

விவசாயிகள், சிறு முயற்சியாளர்கள் என அனைவரும் பாதீட்டில் ஏமாற்றப்பட்டுள்ளனர். தூரநோக்கு திட்டங்கள் இல்லை. “- என்றார்.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
articles2FhQ32bJ38eZ8F2FPwbN0k
செய்திகள்உலகம்

கிரிமியா பாலம் தாக்குதல்: 8 பேர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளித்து ஆயுள் தண்டனை விதிப்பு!

ரஷ்யா-உக்ரைன் போரின்போது கிரிமியா பாலத்தின் (Crimean Bridge) மீது தாக்குதல் மேற்கொண்டமை தொடர்பான வழக்கில் கைது...

25 69274cb0355bf
செய்திகள்இலங்கை

மலையக ரயில் மார்க்க சேவை மாற்றம்: நாளை காலை வரை கோட்டை-ரம்புக்கனைக்கு இடையே மட்டுமே இயக்கம்!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, மலையக ரயில் மார்க்கத்தில் (Up-Country Line) உள்ள அனைத்து...

a0ec4e898a025565eef9a0e946ab5c0fY29udGVudHNlYXJjaGFwaSwxNzM0OTk0MzEw 2.78463606
செய்திகள்இலங்கை

அதிவேக நெடுஞ்சாலைகளில் கட்டணம் ரத்து: சீரற்ற காலநிலை சீரடையும் வரை வாகனங்கள் இலவசமாகப் பயணிக்க அனுமதி!

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களுக்கான கட்டணங்கள் அறவிடப்படாது என...

1500x900 1472110 start
செய்திகள்இலங்கை

மோசமான வானிலை காரணமாக மலேசியாவின் ஏர் ஏசியா விமானம் திருவனந்தபுரத்திற்குத் திருப்பி அனுப்பப்பட்டது!

இலங்கையில் தற்போது நிலவி வரும் மோசமான வானிலை காரணமாக, மலேசியாவிலிருந்து இன்று (நவம்பர் 28) இரவு...