Airport
செய்திகள்இலங்கை

வௌிநாட்டு நாணயத்தாள்களை கடத்த முற்பட்ட ஐவர் கைது!

Share

டுபாய்க்கு சுமார் 42 மில்லியன் ரூபா பெறுமதியான வெளிநாட்டு நாணயங்களை கடத்த முற்பட்ட கடத்தல்காரர்களை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்க போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் நேற்று (20) கைது செய்துள்ளதாக சுங்கப் பேச்சாளர் தெரிவித்தார்.

சந்தேகநபர்கள் பிரபல வௌிநாட்டு நாணய கடத்தல்காரர்கள் என தெரியவருகின்றது.

இதில் மூன்று பெண்கள் மற்றும் இரண்டு ஆண்கள் உட்பட ஐந்து பேர் அடங்குவர். சந்தேகநபர்கள் கொழும்பு பகுதியை சேர்ந்தவர்கள் என தெரியவருகின்றது.

வெளிநாட்டு நாணயங்களில் 22,300 அமெரிக்க டொலர்கள், 63,500 யூரோக்கள், 292,000 சவுதி ரியால்கள், 8,725 பவுண்டுகள் ஸ்டெர்லிங் மற்றும் 75,000 திர்ஹாம்கள் இருந்ததாக சுங்கத்துறையினர் தெரிவிக்கின்றனர்.

இவர்கள் தொடர்பில் ஏற்பட்ட சந்தேகத்தை தொடர்ந்து அவர்களிடமிருந்த பயணப்பொதிகளை சோதனையிட்ட போதே மிகவும் சூட்சுமான முறையில் மறைத்து வைத்திருந்த வெளிநாட்டு நாணயங்களை சுங்க அதிகாரிகள்  கைப்பற்றியுள்ளனர்.

கைப்பற்றப்பட்ட வெளிநாட்டு நாணயங்கள் மற்றும்  கடத்தல்காரர்கள் தொடர்பில் சுங்க போதைப்பொருள் தடுப்பு பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...