jaileee scaled
செய்திகள்இலங்கை

கைதிகளைப் பார்வையிட அனுமதி!

Share

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து சிறைச்சாலைகளிலும் உள்ள கைதிகளைப் பார்வையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி, எதிர்வரும் 04ஆம் திகதி முதல் சிறைக்கைதிகளை பார்வையிட முடியும் என றைச்சாலைகள் பேச்சாளர் சந்தன ஹேக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

கொவிட் தொற்று காரணமாக கடந்த ஓகஸ்ட் மாதம் 07ம் திகதியில் இருந்து சிறைச்சாலை கைதிகள் உறவினர்களை சந்திப்பது தற்காலிகமாக தடை செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில், நாட்டில் கொவிட் தொற்றாளர்கள் எண்ணிக்கை குறைவடைந்து வருகின்றமையால் இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ள சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றி உறவினர்களுக்கு அனுமதி வழங்கவும், முடிந்தவரை E-visit முறை மூலம் பார்வையிட வசதிகளை ஏற்படுத்துமாறும் சிறைச்சாலைகள் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
20 13
இலங்கைசெய்திகள்

இலங்கையில் மற்றுமொரு விபத்து – சிறுவர்கள், பெண்கள் உட்பட 37 பேர் காயம்

கண்டியில் நேற்று இரவு இடம்பெற்ற பேருந்து விபத்தில் 37 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பேருந்து...

19 12
இலங்கைசெய்திகள்

இலங்கை முழுவதும் உப்பு தட்டுப்பாடு – ஒரு கிலோ கிராம் 500 ரூபாய்..!

நாட்டில் உப்பு இறக்குமதியில் ஏற்பட்டுள்ள தாமதம் காரணமாக பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக உப்பு உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது....

18 12
உலகம்செய்திகள்

இலங்கை தமிழர்களுக்கு நடந்த கொடூரம்.. முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவிடத்தில் குண்டு வீச முயற்சி

தமிழ்நாடு சென்னையின் மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள, முன்னாள் முதல்வர்களான அண்ணாத்துரை மற்றும் கருணாநிதி ஆகியோரின் நினைவிடங்களை...

16 14
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபைக்கு உறுப்பினர்களை நியமிப்பதில் ஐ.தே.க.வுக்கு சிக்கல்

கொழும்பு மாநகர சபைக்கு உறுப்பினர்களை நியமிப்பதில் ஐக்கிய தேசியக் கட்சி பெரும் சிக்கலை எதிர்கொண்டுள்ளதாக அரசியல்...