24 6652aa81bec14
இந்தியாசெய்திகள்

புதுடில்லி மருத்துவமனையில் தீப்பரவல்:குழந்தைகள் பலி

Share

புதுடில்லி மருத்துவமனையில் தீப்பரவல்:குழந்தைகள் பலி

இந்தியாவின் புதுடில்லி (New Delhi) – விவேக் விஹாரில் அமைந்துள்ள குழந்தைகள் பராமரிப்பு மருத்துவமனை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தினால் 7 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.

குழந்தைகளின் உடலங்கள் கட்டிடத்தின் மேல் தளங்களில் இருந்து மீட்கப்பட்டதாக பொலிஸாரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது, 12 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளதுடன் இவர்களில் 7 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

எஞ்சிய குழந்தைகள், மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த மருத்துவமனையின் மூன்றாவது மாடியில் தீ விபத்து ஏற்பட்டதாகவும், முழு கட்டிடமும் தீப்பிழம்புகளால் பாதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நேற்று குஜராத் ராஜ்கோட்டில் சிறுவர்களுக்கான கேளிக்கை இடம் ஒன்றில் ஏற்பட்ட தீயினால் இதுவரை 9 சிறுவர்கள் உட்பட்ட 37 பேர் பலியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share

Recent Posts

தொடர்புடையது
1755693983076533 0
இலங்கைசெய்திகள்

மட்டக்களப்பு ஐஸ் போதைப்பொருள் வழக்கு: முன்னாள் மேயரின் கணவர், பிள்ளையானின் மொழிபெயர்ப்பாளர் பொலிஸ் தடுப்புக் காவலில்!

மட்டக்களப்பு நகரில் ஐஸ் (ICE) போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட, மட்டக்களப்பு...

MediaFile 8 1
செய்திகள்இலங்கை

சிறையில் ஆடம்பர வாழ்க்கை: போதைப்பொருள் பாவனை, மசாஜ் காணொளி விவகாரம் – விசாரணை ஆரம்பம்!

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி எனக் கூறப்படும் கைதி ஒருவர் சிறைச்சாலைக்குள் கையடக்கத் தொலைபேசியைப் பயன்படுத்தி ஆடம்பரமாகவும் வசதியாகவும்...