24 6652aa81bec14
இந்தியாசெய்திகள்

புதுடில்லி மருத்துவமனையில் தீப்பரவல்:குழந்தைகள் பலி

Share

புதுடில்லி மருத்துவமனையில் தீப்பரவல்:குழந்தைகள் பலி

இந்தியாவின் புதுடில்லி (New Delhi) – விவேக் விஹாரில் அமைந்துள்ள குழந்தைகள் பராமரிப்பு மருத்துவமனை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தினால் 7 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.

குழந்தைகளின் உடலங்கள் கட்டிடத்தின் மேல் தளங்களில் இருந்து மீட்கப்பட்டதாக பொலிஸாரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது, 12 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளதுடன் இவர்களில் 7 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

எஞ்சிய குழந்தைகள், மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த மருத்துவமனையின் மூன்றாவது மாடியில் தீ விபத்து ஏற்பட்டதாகவும், முழு கட்டிடமும் தீப்பிழம்புகளால் பாதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நேற்று குஜராத் ராஜ்கோட்டில் சிறுவர்களுக்கான கேளிக்கை இடம் ஒன்றில் ஏற்பட்ட தீயினால் இதுவரை 9 சிறுவர்கள் உட்பட்ட 37 பேர் பலியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
20
இலங்கைசெய்திகள்

இந்திய பாதுகாப்பு ஒப்பந்தத்தை இரகசியமாக கையாளும் அரசாங்கம்!

இந்தியப் பிரதமரின் இலங்கை விஜயத்தின் போது கையெழுத்திடப்பட்ட பாதுகாப்பு ஒப்பந்தத்தை பொதுமக்களுக்கு வெளியிட முடியாது என்று...

19
இலங்கைசெய்திகள்

மனிதர்களும் யானைகளும் ஒன்றாக வாழும் நிலப்பரம்பல் : அதிர்ச்சிக்குள்ளாக்கும் ஆய்வுகள்

இலங்கையில் 44 வீத நிலப்பரப்பில் மனிதர்களும் யானைகளும் ஒன்றாக வசிப்பதாக ஆய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த...

18
இலங்கைசெய்திகள்

திருகோணமலை கடற்படை தள நிலத்தடி சிறைகள் : முன்னாள் கடற்படைத் தளபதியின் அதிர்ச்சி வாக்குமூலம்

திருகோணமலை கடற்படை தள நிலத்தடி சிறைகளில் தனிநபர்களை சட்டவிரோதமாக தடுத்து வைத்திருந்தமை தொடர்பாக குற்றப் புலனாய்வுத்...

16
இலங்கைசெய்திகள்

அரசியல்வாதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள எச்சரிக்கை கடிதங்கள்

25 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் 100 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எச்சரிக்கை கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன....